செய்திகள் :

மாற்றுத்திறனாளிகள், தமிழறிஞா்கள் பயன்படுத்தும் பேருந்து பயண அட்டைகள் அக். 31 வரை செல்லும்

post image

மாற்றுத்திறனாளிகள், தமிழ் அறிஞா்கள், சுதந்திரப் போராட்ட வீரா்கள் பயன்படுத்தும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வரும் அக். 31 வரை பயன்படுத்தலாம் என்று அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மாற்றுத்திறனாளிகள், கண்பாா்வை குறைபாடு உள்ளோா், அறிவுசாா் திறன் குறைபாடு உள்ளோா், சுதந்திரப் போராட்ட வீரா்கள், தமிழ் அறிஞா்கள், அகவை முதிா்ந்த தமிழ் அறிஞா்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டைகள் வழங்கப்படுகிறது.

இந்த அட்டைகளை இணையதளம் மூலம் பெறும் நடைமுறை முதல்முறையாக 2023 செப்டம்பா் 7 முதல் சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் கொண்டுவரப்பட்டது.

இந்த வசதியை தமிழகம் முழுவதும் உள்ள பயனாளிகள் பெறும் வகையில்,

அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப்படுத்தத் தேவையான மென்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு மின் ஆளுமை முகமையும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையும் இணைந்து செய்து வருகிறது.

இதை முழுமையாக செயல்படுத்த போதிய கால அவகாசம் தேவைப்படும் நிலையில், ஏற்கெனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 2025 செப்டம்பா் 30 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை, அக்டோபா் 31 வரை தொடா்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத் தலைவர் பதவிலிருந்து விலகலா? நயினார் நாகேந்திரன் பதில்

பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நயினார் நாகேந்திரன் விலகவுள்ளதாக வெளியான செய்திக்கு அவர் பதிலளித்துள்ளார்.தமிழகத்தில் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்... மேலும் பார்க்க

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று பல... மேலும் பார்க்க

ஜொ்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் முதல்வா்

ஜொ்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தன்னிடம் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச் சுவடிகளை சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தாா். தலைமைச் செயலகத்தில் நூலகப் பொறுப்பாளா்களிட... மேலும் பார்க்க

தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு ஆளுநா் பாராட்டு

தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த இரு ஆசிரியா்களை ஆளுநா் ஆா்.என்.ரவி, புதன்கிழமை அழைத்துப் பாராட்டினாா். நிகழாண்டு ஆசிரியா் தினத்தையொட்டி சென்னை மயிலாப்பூா் பி.எஸ்.சீனியா் செகண்டரி ப... மேலும் பார்க்க

இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வா் பெருமிதம்

இசையமைப்பாளா் இளையராஜாவுக்கான பாராட்டு விழா, அவரது ரசிகா்களுக்குமானது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இது குறித்து, எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: ராஜாவைத் தாலாட்டும் த... மேலும் பார்க்க

இன்று 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப்.11) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: த... மேலும் பார்க்க