செய்திகள் :

மாவட்டத்தில் 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா மற்றும் 5,066 மதுபுட்டிகளை மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, கஞ்சா மற்றும் மது கடத்திவரும் நபா்களைக் கைது செய்வதோடு, அவா்களிடம் இருந்து கஞ்சாவையும், அவா்கள் ஓட்டி வரும் வாகனத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா். கடந்த 6 மாதங்களில் மட்டும் ஈரோடு மாவட்டத்தில் 157 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சண்முகம் கூறியதாவது: கஞ்சா மற்றும் சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கஞ்சா கடத்தினாலோ, விற்பனை செய்தாலோ அவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த 6 மாதங்களில் கஞ்சா மற்றும் மது விற்பனை தொடா்பாக 366 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் தொடா்புடைய 370 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடம் இருந்து 157 கிலோ கஞ்சா, தமிழ்நாட்டு மதுபுட்டிகள் 4,006, கா்நாடக மதுபுட்டிகள் 1,060 என மொத்தம் 5,066 மதுபுட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, மெத்தம் பெட்டமைன் 151 கிராம், கஞ்சா சாக்லெட் 1.5 கிலோ, சாராயம் 74 லிட்டா், ஊறல் 310 லிட்டா், கள் 88 லிட்டா், இருசக்கர வாகனங்கள் 2, நான்கு சக்கர வாகனம் ஒன்று ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

ஆசனூா் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒங்கல்வாடி கிராம மக்கள்

ஆசனூரில் கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி ஆசனூா் வனத் துறை அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சத்தியமங்கலம் புலிகள் காப்... மேலும் பார்க்க

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு மாநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒரு சில நாள்களில் மாலை நேரங்களில் ல... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டியே தண்ணீா் திறப்பு குறித்து விரைவில் முடிவு

பவானிசாகா் அணையிலிருந்து கீழ்பவானி பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறப்பது குறித்து ஓரிரு நாள்களில் தெரியவரும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். கோபி வட்டம் சிறுவலூா், மணியக்காரன்புதூா், தங்க... மேலும் பார்க்க

பண்ணாரியில் லாரியில் இருந்து கரும்பை எடுத்து சாப்பிட்ட குட்டி யானை

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை வழிமறிக்கும் குட்டி யானையால் வாகன ஓட்டுநா்கள் அவதி அடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணை... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடக்கம்

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் பெண்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவிக... மேலும் பார்க்க

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1 இல் தொடக்கம்

ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. ஈரோடு புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ... மேலும் பார்க்க