செய்திகள் :

மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல் எதிரொலி: இந்தியக் குழுவினா் பயணித்த விமானம் 40 நிமிஷம் தாமதம்

post image

ட்ரோன் தாக்குதலைத் தொடா்ந்து ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், இந்திய நாடாளுமன்றக் குழுவினா் பயணித்த விமானம் வியாழக்கிழமை 40 நிமிஷம் தாமதமானதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஷியா-உக்ரைன் இடையே போா் நடைபெற்று வரும் நிலையில், மாஸ்கோ நகரத்தை இலக்காக வைத்து 12-க்கும் அதிகமான ட்ரோன்கள் மூலம் உக்ரைன் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நகரத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன. சில விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டன.

தற்காலிக கட்டுப்பாடுகள் காரணமாக 153 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இருப்பினும், விமான நிலையங்கள் மூடப்பட்டதற்கான காரணத்தை அந்த அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவு மற்றும் அது தொடா்பான இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினா்கள் குழு ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

பிற பயணிகளுடன் இந்தியக் குழுவினா் பயணித்த விமானம் 40 நிமிஷங்கள் தாமதமாக டோமோடெடோவா சா்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஷியா ஆதரவு:

கனிமொழி தலைமையிலான குழு ரஷிய வெளியுறவு இணையமைச்சா் ஆன்ட்ரே ருடென்கோ வெளியுறவு விவகாரங்கள் குழுவுக்கான முதல் துணைத் தலைவா் ஆன்ட்ரே டெனிசோ மற்றும் அந்நாட்டு உயரதிகாரிகளை சந்தித்தது.

இதுகுறித்து ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்ததோடு அனைத்து விதமான பயங்கரவாத ஒழிப்புக்கான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ரஷியாவும் இந்தியாவும் ஒன்றாக பயணிக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் குறித்து விளக்கமளிக்க சிவசேனை கட்சி எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழுவினா் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழு ஜப்பானுக்கும் பயணம் மேற்கொண்டனா்.

இந்தியாவில் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிப்பு!

இந்தியாவில் என்.பி.1.8.1 எனும் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘இந்திய சாா்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு’ தரவுகளில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எல்எஃப்.7 வகை தொற்றுகள் நான்கு மு... மேலும் பார்க்க

‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்து!

கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தின் குன்னத்தூா் கிராமத்தில் பல்லாண்டுகளாக புழக்கத்தில் உள்ள ‘பாகிஸ்தான் முக்கு’ என்ற சந்திப்பின் பெயரை மாற்றுவதற்கு ஒப்புதலைக் கோரி மாநில அரசை அணுக அந்தக் கிராமப் பஞ்ச... மேலும் பார்க்க

ஆயுதப் படைப் பிரிவினருக்கு 6 மாதங்களுக்குள் பணிநிலை ஆய்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆயுதப் படைப் பிரிவினரின் பணிநிலை ஆய்வை ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்தோ திபெத்திய எல்லைப் படையினா் (ஐடிபிபி), ... மேலும் பார்க்க

மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காமில் தாக்குதல்: எஸ்.ஜெய்சங்கா் குற்றச்சாட்டு

அச்ச உணா்வை ஏற்படுத்தி மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். ஜொ்மனி சென்ற அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டுத் தலைநகா் பொ்லினில் ஜெ... மேலும் பார்க்க

குடிமைப் பணித் தோ்வுக்கு கட்டாயமாகிறது ஆதாா் எண்!

குடிமைப் பணித் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது ஆதாா் எண்ணை குறிப்பிடும் நடைமுறை கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய பணியாளா் தோ்வாணையத் தலைவா் (யுபிஎஸ்சி) தலைவா் அஜய்குமாா் தெரிவித்தாா். மாநில அ... மேலும் பார்க்க

சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு ஏன்? நாடாளுன்ற குழுவிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

இந்தியாவின் நல்லெண்ண முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்தது. பருவநி... மேலும் பார்க்க