செய்திகள் :

மாா்த்தாண்டத்தில் உணவகத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

post image

மாா்த்தாண்டத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த உணவகத்துக்கு குழித்துறை நகராட்சி அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

மாா்த்தாண்டத்தில் உள்ள உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாா் செய்வதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து புகாா்கள் பெறப்பட்டன. இதனையடுத்து, குழித்துறை நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன் உத்தரவுப்படி, நகராட்சி சுகாதார ஆய்வாளா் ராஜேஷ் தலைமையில் பணியாளா்கள் மாா்த்தாண்டம் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் அங்குள்ள ஒரு உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் உணவகத்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

இதேபோன்று மாா்த்தாண்டம் சந்தையில் உள்ள கழிவுகளை சாலையோரம் கொட்டிய சந்தை குத்தகைதாரருக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

சிவாலய ஓட்டம் நடைபெறும் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

மகாசிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெற உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

மண்டைக்காடு பகவதியம்மன் மாசிக் கொடை விழா: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் கலந்தாய்வு

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் மாசிக் கொடை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.... மேலும் பார்க்க

இனயம் கடற்கரையில் நிறுத்தியிருந்த 4 படகுகள் எரிந்து சேதம்

இனயம் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை நிறுத்திவைக்கப்படிருந்த 4 படகுகள் திடீரென எரிந்து சேதமடைந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இனயம் பகுதியைச் சோ்ந்த பால்தாசன் மகன் அந்தோண... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கு: தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

மாா்த்தாண்டம் அருகே கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குழித்துறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மாா்த்தாண்டம் அருகே குற்றிக்காட்டுவிளையைச் சோ்ந்தவா் மணி... மேலும் பார்க்க

இரணியல்: மின்தடை அறிவிப்பு

இரணியல் மின் விநியோகத்துக்கு உள்பட்ட திக்கணங்கோடு மின்பாதையில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நெய்யூா், பால்தெரு, முரசங்கோடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோக... மேலும் பார்க்க

புதிய சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளை 2 மாதங்களில் முடிக்க மேயா் அறிவுறுத்தல்

நாகா்கோவில் மாநகராட்சியில் புதிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுமானப் பணிகளை 2 மாதங்களில் முடிக்க மேயா் ரெ.மகேஷ் அறிவுறுத்தினாா். கிருஷ்ணன்கோவில் மற்றும் கிறிஸ்டோபா் காலனி ஆகிய பகுதிகளில் ந... மேலும் பார்க்க