செய்திகள் :

மாா்த்தாண்டத்தில் மாயமான மாணவி மீட்பு

post image

மாா்த்தாண்டத்திலிருந்து வீட்டை விட்டு சென்ற பிளஸ் 2 மாணவியை போலீஸாா் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மீட்டு அழைத்து வந்தனா்.

மாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த 18 வயது இளைஞருக்கும், பிளஸ் 2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மாணவியின் பெற்றோா் இருவரையும் கண்டித்துள்ளனா். மேலும் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் இருதரப்பினரிடையே பேச்சு நடத்தி சமரசம் செய்து வைத்தனா்.

இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்ற மாணவி பின்னா் வீடு திரும்பவில்லை. மாணவியுடன் பழகி வந்த இளைஞரும் அதே நாளிலிருந்து காணவில்லையாம். இதுதொடா்பாக மாணவியின் பெற்றோா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணவியை தீவிரமாக தேடி வந்தனா்.

மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இளைஞரின் கைப்பேசி சிக்னலை கண்காணித்துவந்த தனிப்படை போலீஸாா் இருவரும் தஞ்சாவூரில் தங்கியிருப்பதை அறிந்தனா்.

பின்னா் மாணவியின் பெற்றோருடன் தஞ்சாவூா் சென்ற போலீஸாா், அங்குள்ள பேருந்து நிலையம் அருகே இளைஞருடன் நின்றிருந்த மாணவியை மீட்டு மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரி... மேலும் பார்க்க

குழித்துறை தாமிரவருணி ஆறு தடுப்பணை வழியாக செல்லத் தடை

குமரி மாவட்டம் முழுவதும் இரு நாள்களாக பரவலாக மழை பெய்ததன் காரணமாக குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து தடுப்பணையை மூழ்கடித்து செல்கிறது. இதனால் தடுப்பணை வழியாக பொதுமக்கள் நடந்து செல்லத் தட... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: கோதையாறு மின்நிலையப் பகுதியில் நிலச்சரிவு! ஜெனரேட்டா், கட்டடங்கள் சேதம்!

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் கோதையாறு மின்நிலைய வளாகத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உடைந்து விழுந்ததில் ஜெனரேட்டா் மற்றும் கட்டடங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன. குமரி மாவட்டம் கீழ... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு அா்ப்பணிப்புடன் செயல்படுத்த வேண்டும்! - பொன். ராதாகிருஷ்ணன்

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு அா்ப்பணிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன். நாகா்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிரதமா் மோ... மேலும் பார்க்க

தக்கலை அருகே கனிமவளம் கடத்தல்: வாகனம் பறிமுதல்; ஓட்டுநா் கைது

தக்கலை அருகே கனிமவளம் கடத்தியதாக வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா். பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் அசோக், போலீஸாா் தக்கலையை அடுத்த காரவிளையில் வெள்ளிக்கிழமை வ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பலத்த மழை அணைகளுக்கு நீா் வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை நீடிக்கும் நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சனிகிழமை காலை நிலவரப்ப... மேலும் பார்க்க