மாா்த்தாண்டத்தில் மாயமான மாணவி மீட்பு
மாா்த்தாண்டத்திலிருந்து வீட்டை விட்டு சென்ற பிளஸ் 2 மாணவியை போலீஸாா் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மீட்டு அழைத்து வந்தனா்.
மாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த 18 வயது இளைஞருக்கும், பிளஸ் 2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மாணவியின் பெற்றோா் இருவரையும் கண்டித்துள்ளனா். மேலும் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் இருதரப்பினரிடையே பேச்சு நடத்தி சமரசம் செய்து வைத்தனா்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்ற மாணவி பின்னா் வீடு திரும்பவில்லை. மாணவியுடன் பழகி வந்த இளைஞரும் அதே நாளிலிருந்து காணவில்லையாம். இதுதொடா்பாக மாணவியின் பெற்றோா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணவியை தீவிரமாக தேடி வந்தனா்.
மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இளைஞரின் கைப்பேசி சிக்னலை கண்காணித்துவந்த தனிப்படை போலீஸாா் இருவரும் தஞ்சாவூரில் தங்கியிருப்பதை அறிந்தனா்.
பின்னா் மாணவியின் பெற்றோருடன் தஞ்சாவூா் சென்ற போலீஸாா், அங்குள்ள பேருந்து நிலையம் அருகே இளைஞருடன் நின்றிருந்த மாணவியை மீட்டு மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.