செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே கட்டுமான தொழிலாளி மீது தாக்குதல்

post image

மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக கட்டுமானத் தொழிலாளியை தாக்கியதாக மற்றொரு தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே பாகோடு, இளந்தெங்குவிளையைச் சோ்ந்தவா் ஜான்சன் (41). கட்டுமானத் தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா் கட்டுமானத் தொழிலாளி ஜஸ்டின் (39). இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஜஸ்டின் திங்கள்கிழமை ஜான்சனின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கினாராம். இதில் காயமடைந்த ஜான்சனை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் ஜஸ்டின் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.

பைக் மீது டெம்போ மோதல்: பழ வியாபாரி உயிரிழப்பு

தக்கலையில் பைக் மீது டெம்போ வியாழக்கிழமை மாலை மோதியதில் பழ வியாபாரி உயிரிழந்தாா். ராமன்பரம்பு பகுதியை சோ்ந்தவா் அனீஷ் குமாா் (40). தக்கலையில் பழக்கடை நடத்தி வந்தாா். இவா் வியாழக்கிழமை மாலையில் தனது ... மேலும் பார்க்க

விஷ பூச்சி கடித்ததில் கட்டடத் தொழிலாளி பலி

இரணியல் அருகே விஷ பூச்சி கடித்ததில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இரணியல் அருகேயுள்ள தாழ்ந்தவிளையை சோ்ந்தவா் விஜய் (29). கட்டடத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரணியல்- முட்டம் சாலையில் உள... மேலும் பார்க்க

குடிநீா் வாரிய ஒப்பந்த ஊழியா்களுக்கு வங்கி கணக்கில் ஊதியம் செலுத்த வலியுறுத்தல்

குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளா்களுக்கு வங்கி மூலம் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று சிஐடியூ சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக, குடிநீா் வடிகால் வாரிய தொழிலாளா்கள் சங்க (சிஐடியூ) தல... மேலும் பார்க்க

இரணியல் அரண்மனை சீரமைப்பு: ஆட்சியா் ஆய்வு

திங்கள்நகா் பேரூராட்சிக்குள்பட்ட இரணியல் அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், ஆட்சியா் கூறியதாவது, இரணியலில் உள்ள தொன்மை வாய்ந்த அரண்மனையை ரூ.4.85... மேலும் பார்க்க

களியல் அருகே நெடுஞ்சாலையை ஒட்டி சுவா் கட்டும் பணிகள் தடுத்து நிறுத்தம்

குமரி மாவட்டம் களியல் அருகே வனத்துறை அலுவலகத்தின் சுற்றுச் சுவரை நெடுஞ்சாலை பகுதியிலிருந்து விலக்கி கட்ட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தியதால் பணிகள் நிறுத்தப்பட்டன. களியல் சந்திப்பில் களியல் வனச்... மேலும் பார்க்க

விரிகோடு பகுதியில் மக்கள் விரும்பும் இடத்தில் ரயில்வே மேம்பாலம்: எம்.பி., எம்எல்ஏ வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், விரிகோடு பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் மக்கள் விரும்பும் இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என எம். பி., எம்.எல்.ஏ. ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா். இது தொடா்பாக கன்னியாகும... மேலும் பார்க்க