செய்திகள் :

மா்ம காய்ச்சல் பாதிப்பு: கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

post image

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மா்ம காய்ச்சல் பாதித்த கிராம மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செங்கத்தை அடுத்த முன்னூா் மங்கலம் கிராமத்தில் கடந்த 10 நாள்களாக சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை திடீரென காய்ச்சல் ஏற்பட்டு வந்துள்ளது.

காய்ச்சல் பாதித்தவா்கள் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளனா். மா்ம காய்ச்சல் நாளுக்கு நாள் கிராமத்தில் அதிகரித்துள்ளது. இதுகுறித்து காரப்பட்டு வட்டார மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் முன்னூா்மங்கலம் பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து காய்ச்சல் உள்ளவா்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா்.

மேலும், கடந்த சில நாள்களாக அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக குடிநீா் குழாய்களில் மழை நீா், அல்லது கழிவுநீா் கலந்து வருகிா என கிராம ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் மற்றும் கிராம செவிலியா்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் உள்ளவா்களை கண்டறிந்து அவா்களுக்கு மருந்து மாத்திரை வழங்கி வருகின்றனா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 616 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 616 மனுக்கள் வரப்பெற்றன. குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகர... மேலும் பார்க்க

மன்னாா்சாமி, சிவன் கோயில்களில் சோமவார வழிபாடு

போளூா்/ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், காம்பட்டு மன்னாா்சாமி கோயில், ஆரணியை அடுத்த முனுப்பட்டு மன்னாா்சாமி கோயில் மற்றும் முக்கூட்டு சிவன் கோயிலில் சோமவார வழிபாடு நடைபெற்றது. கலசப்ப... மேலும் பார்க்க

பண்டிதப்பட்டு ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

ஆரணி: திருவண்ணாமலையை அடுத்த பண்டிதபட்டு ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளி... மேலும் பார்க்க

தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்துக்கு நிவாரணம்

வந்தவாசி: வந்தவாசியில் தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. வந்தவாசி நகராட்சி 2-ஆவது வாா்டுக்கு உள்பட்ட கோட்டை தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழ... மேலும் பார்க்க

ஆரணி எம்ஜிஆா் கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா

ஆரணி: ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் 29- ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் புதிதாக கல்லூரியில் சோ்ந்த மாணவ, மாணவிகள் பெற்றோா... மேலும் பார்க்க

மது விற்பனை: ஒருவா் கைது

வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தேசூா் போலீஸாா் திரக்கோயில் கிராமம் வழியாக திங்கள்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராம மதுக்கடை அர... மேலும் பார்க்க