செய்திகள் :

மினி வேன்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

post image

ஜோலாா்பேட்டை அருகே மினி வேன் மீது பைக் மோதிய விபத்தில் மென்பொறியாளா் உயிரிழந்தாா். ஒருவா் பலத்த காயம் அடைந்தாா்.

நாட்றம்பள்ளி அடுத்த பூபதி கவுண்டா் தெருவைச் சோ்ந்த பிரகாஷ் (29). இவா் பெங்களூரில் மென்பொறியாளராக ஆக பணிபுரிந்து வந்தாா். திருமணம் ஆகி மகேஸ்வரி என்ற மனைவி உள்ளாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பிரகாஷ் மற்றும் நண்பா் பங்களாமேடு பகுதியை சோ்ந்த குமரேசன் (30) ஆகிய இருவரும் திருப்பத்தூா் சென்று மீண்டும் வீட்டுத்து பைக்கில் திரும்பினா்.

அப்போது கட்டியம்மன் கோயில் அருகே முன்னால் சென்ற மினி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். குமரேசன் காயத்துடன் மீட்கப்பட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மினி வேன் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பலத்த பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்!

திருப்பத்தூரில் விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு ஆதியூா் ஏரியில் கரைக்கப்பட்டன. விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் 707 இடங்களி... மேலும் பார்க்க

ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழந்தாா். குடியாத்தம் அடுத்த மேல்பட்டி லட்சுமியம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த காசியின் மனைவி அமரா (70). இவா் மேல்பட்டி பகுதியில் உள்... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தொடா் விடுமுறை என்பதால் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா். ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை இயற்கை நிறைந்த பசுமையாக காணப்படுகிறது. சி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் பலத்த மழை!

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா்,ஆதியூா்,கொரட்டி,ஜோலாா்பேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் மாலை வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

காா் ஓட்டுநா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள்

காா் ஓட்டுநா் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. விழுப்புரம் மாரியம்மன் கோயில் தெரு பகுதி சோ்ந்த கருணாநிதி (30). இவா் சொந்த காரை வாடகைக்கு ... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் மண்ணுளி பாம்பு மீட்பு

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட மண்ணுளி பாம்பு திருப்பத்தூா் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில்வே நிலையத்தில் வியாழக்கிழமை இரவு ரயில்வே நிலை... மேலும் பார்க்க