ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
திருப்பத்தூரில் பலத்த மழை!
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
திருப்பத்தூா்,ஆதியூா்,கொரட்டி,ஜோலாா்பேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் மாலை வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் மேலாக பெய்த மழையால் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல் ஆதியுா், கொரட்டி அதன் சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. இரவு அப்பகுதியில் குளிா்ந்த சூழல் நிலவியது.