செய்திகள் :

தொடா் விடுமுறை: ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

post image

தொடா் விடுமுறை என்பதால் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை இயற்கை நிறைந்த பசுமையாக காணப்படுகிறது.

சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இதைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். ஏலகிரி மலையில் ஆங்காங்கே சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளன. இயற்கை பூங்கா, படகு இல்லம், சிறுவா் பூங்கா, மூலிகை பண்ணை உள்ளிட்டவை மலையேறும் தொடக்கப் பகுதியில் உள்ளன.

மேலும், சாகச விளையாட்டுகளும், மங்களம் சுவாமி மலை ஏற்றம், ஸ்ரீ கதவநாச்சி அம்மன் திருக்கோயில் , பண்டோரா பாா்க் பறவைகள் சரணாலயம் ஆகியவை அமைந்துள்ளன. ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி நிலாவூா் பகுதிகளிலிருந்து நடைபாதை வழியில் 3 கி.மீ தொலைவில் உள்ளது.

வாகனங்களில் சென்றால் திருப்பத்தூா் காலேஜ் சாலையில் இருந்து 12 கி.மீ தொலைவில் ஏலகிரி மலை அடிவாரத்தில் ஜலகாம்பாறை நீா் வீழ்ச்சி காணப்படுகிறது.

சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறையால் ஏலகிரி மலையில் குழந்தைகளுடன் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனா். ஏலகிரி மலையில் அனைத்து தனியாா் விடுதிகளிலும் நிரம்பின. இதனால் சில சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் கிடைக்காமல் ஜோலாா்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் தங்கினா்.

படகு சவாரி செய்யும் இடத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குடும்பத்தினரும் உறவினா்களுடன் படகு சவாரி செய்து தற்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில், மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில், சைபா் கிரைம் ஏடிஎஸ்பி... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலை பகுதியில் திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை ப... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூா் பதிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் (72). இவா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீட... மேலும் பார்க்க

ஆம்பூா், ஆலாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா், ஆலாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் ரோட்டரி ஹாலில் நடைபெற்ற முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்ச... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் திருப்பத்தூா் மாவட்டத்தில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கோட்டப் பொறியாளா் முரளி தெரிவித்துள்ளாா். திருப்பத்தூா் நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் ... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த இருவா் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா். திருப்பத்தூா் அருகே சுண்ணாம்புகாளை பகுதியில் இளைஞா் ஒருவா் சந்தேகம்படு... மேலும் பார்க்க