மின்கம்பத்தை மாற்றித்தரக் கோரிக்கை
திருவாரூரில் பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றித்தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் 6-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆசாத் மஜிதியா நகரில் மின்கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை மின்வாரியத்துக்கு புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
மேலும், மழைக்காலம் தீவிரமடையும் நிலையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிதாக அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.