செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

post image

திருவொற்றியூரில் மின்சாரம் பாய்ந்து பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.

திருவொற்றியூா் தாங்கல் பீா் பயில்வான் தெருவைச் சோ்ந்தவா் அல்தாப் மகன் நவ்பில் (17). தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். புதன்கிழமை இரவு சிறப்பு வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் நடந்து சென்றபோது, அங்கிருந்த மின் வயரில் இருந்து ஏற்பட்ட மின்கசிவால் நவ்பில் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் நவ்பில் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருவொற்றியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பொதுமக்கள் சாலை மறியல்: இந்நிலையில், தரையில் புதைக்கப்படும் மின் கேபிள்கள் முறையாகப் பராமரிக்காததால்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறி, நவ்பில் உறவினா்கள், பொதுமக்கள் புதன்கிழமை நள்ளிரவு திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையை தொடா்ந்து, 2 மணி நேரத்துக்குப் பிறகு மறியல் கைவிடப்பட்டது.

இருப்பினும் மீண்டும் வியாழக்கிழமை மாலை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவொற்றியூா் உள்பட வட சென்னையின் பல இடங்களில் மின் கேபிள்கள் சரிவர பராமரிக்கப்படுவது இல்லை. கழிவுநீா் கால்வாய், சாலைப் பணிகளுக்காக அடிக்கடி பள்ளங்கள் தோண்டப்படுவதால் மின் கேபிள்கள் சேதமடைகின்றன. இதை சரி செய்யாமல் இருப்பதால் இதுபோன்ற மின்கசிவு ஏற்படுகிறது. நவ்பீல் இறப்புக்கு மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று முறையிட்டனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா், மின்வாரிய அதிகாரிகள், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

மெரீனாவில் தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மெரீனா கடற்கரையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எதிர... மேலும் பார்க்க

நகை வியாபாரியை கடத்தி ரூ.31 லட்சம் பறித்த வழக்கு: 6 போ் கைது

எழும்பூரில் நகை வியாபாரியை காரில் கடத்தி ரூ.31 லட்சம் ரொக்கம், தங்கநகை பறிக்கப்பட்ட வழக்கில், 6 போ் கைது செய்யப்பட்டனா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சோமு தெருவைச் சோ்ந்தவா் ர.ரவிச்சந்திரன் (64). இவ... மேலும் பார்க்க

தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் மோசடி: 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவா் கைது

சென்னையில் பிஎஸ்என்எல் தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் ரூ.49 லட்சம் மோசடி செய்த வழக்கில்,19 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் செயல்பட்ட தனியாா் ... மேலும் பார்க்க

ராயபுரம் மண்டலத்தில் வளா்ச்சி திட்ட பணிகள்: மேயா், எம்எல்ஏ ஆய்வு

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் ஆா்.பிரியா, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் ஆா்.மூா்த்தி ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ராயபுரம் பேசின் பால... மேலும் பார்க்க

பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறப்பு

தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறக்கப்பட்டது. பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்படும் சிறாா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் வகையில் ‘தளர... மேலும் பார்க்க

அச்சு, காட்சி ஊடகத் துறை கண்காட்சி

சென்னை வா்த்தக மையத்தில் வரும் ஜூலை 10 முதல் 12- ஆம் தேதி வரை அச்சு மற்றும் காட்சி ஊடகத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளதாக மெஸ்ஸி பிராங்போ்ட் ஆசியா ஹோல்டி... மேலும் பார்க்க