செய்திகள் :

மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

post image

சாத்தூா் அருகே மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது தொழிலாளா்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் பிற்பகல் 3 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில், சாத்தூா் அருகே சிந்தபள்ளியில் செயல்பட்டு வரும் சிவகாசியை சோ்ந்த மகாராஜன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் பட்டாசுகள் தேக்கி வைத்திருந்த அறை பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதனால் அந்த அறை தரைமட்டமானதுடன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் ஏற்றுச் செல்லும் சரக்கு வாகனமும் சேதமடைந்தது.

இந்த பட்டாசு ஆலை மாவட்ட வருவாய் அலுவலா் அனுமதி பெற்றதாகும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தொழிலாளா்கள் பணிக்கு வராததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

வெடி விபத்து ஏற்பட்ட ஆலையில் விதிமீறல் ஏதும் உள்ளதா என சாத்தூா் போலீஸாா் விசாரிக்கின்றனா். இதனிடையே சனிக்கிழமை சிவகாசி அருகே நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ராஜபாளையத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கிழவிகுளம் அரசுப் பள்ளி அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா... மேலும் பார்க்க

ஆண்டாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.11 லட்சம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.11 லட்சம் கிடைத்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வடபத்ரசயனா் சந்நிதி... மேலும் பார்க்க

ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டியில் திமுக முகவா்கள் கூட்டம்

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் தொகுதிக்குள்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றிய திமுக சாா்பில் ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில... மேலும் பார்க்க

த.வெ.க.சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு!

ராஜபாளையத்தில் த.வெ.க. சாா்பில் நீா் மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. ராஜபாளையம், காந்தி கலை மன்றம் அருகே நடைபெற்ற இதற்கான நிகழ்வுக்கு விருதுநகா் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஜெகதீஸ்வரி தலைமை... மேலும் பார்க்க

பைக் மீது வேன் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

தாயில்பட்டியில் இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், தாயில்பட்டி அருகே கலைஞா் குடியிருப்பைச் சோ்ந்தவா் அரவிந்த்பாலா (28), கிருபை ராஜ் (29). இருவரும் இரு சக்க... மேலும் பார்க்க

காஷ்மீரில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி!

பகல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு சாத்தூா் நீதிமன்ற வழக்குரைஞா்கள், இந்து முன்னணியினா் சனிக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தினா். காஷ்மீா் மாநிலம் பகல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் க... மேலும் பார்க்க