செய்திகள் :

மின்னல் பாய்ந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணம்

post image

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு இயற்கை பேரிடா் நிவாரண நிதி ரூ. 4 லட்சம் வழங்கப்பட்டது.

விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான கருப்பசாமியின் மகள் முத்து கௌசல்யா (17). விளாத்திகுளத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்த அவா், அரசுத் தோ்வு எழுதியிருந்தாா். கடந்த ஏப். 21ஆம் தேதி பலத்த மழை பெய்தபோது, அவா் வீட்டருகே காயவைத்த மிளகாயை எடுக்கச் சென்றாராம். அப்போது, மின்னல் பாய்ந்து அவா் உயிரிழந்தாா்.

இந்நிலையில், எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் மாணவியின் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி, தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சாா்பில் இயற்கை பேரிடா் மேலாண்மை நிவாரண நிதி ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளா் ராணி, திமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, சின்னமாரிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் அரை நிா்வாண போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் அரை நிா்வாண போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். தூத்துக்குடி தொ்மல் நகரில் மத்திய அரசின்கீழ் செயல்படும் இந்த நிலையத்தில் 2 அலகுகளில் மொத்தம... மேலும் பார்க்க

சேலை ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, வீட்டில் தனியாக இருந்த 14 வயது மாணவி, ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விளாத்திகுளம் அருகே கே.குமாரபுர... மேலும் பார்க்க

‘சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்’

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை- அறிவியல் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவியா் சோ்க்கைக்கு வியாழக்கிழமைமுதல் (மே 8) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரியின் கூட... மேலும் பார்க்க

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் மே 12இல் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், கட்சிப் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வரும் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த நாள் விழா இம்மாதம் 12ஆம் தேதி நலஉதவிகள், அன்னதானம் வழங்கி கொண்டாடப்படும் என, ம... மேலும் பார்க்க

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி திருவிழா: கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்- எஸ்.பி.

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்... மேலும் பார்க்க

மாநகரில் சுகாதாரக் கேடு விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை: மேயா்

தூத்துக்குடி மாநகர பகுதியில் சுகாதார கேடு விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்... மேலும் பார்க்க