செய்திகள் :

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

post image

தில்லியில் இருந்து லண்டன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தின் பயணம், தொழில்நுட்பக் கோளாறினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தில்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் செல்ல, ஏர் இந்தியா விமானம், இன்று (ஜூலை 31) புறப்படத் தயாரானது. அப்போது, விமானிகள் மேற்கொண்ட வழக்கமான சோதனைகளின் மூலம், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கக் கூடும் எனும் சந்தேகத்தில் இந்தப் பயணத்தை அவர்கள் ரத்து செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் இருந்து, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்தப் பயணத்தில் பறக்கத் தயாரானது, போயிங் 787-9 விமானம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, வெளியேற்றப்பட்ட பயணிகள் அனைவருக்கும் மற்றொரு விமானம் மூலம் லண்டன் செல்வதற்கான நடவடிக்கைகள் ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பயணிகளின் எண்ணிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

முன்னதாக, ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் 260 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிலிப்பின்ஸ் அதிபர் ஆக.4-ல் இந்தியா வருகை!

It is reported that the flight of an Air India flight from Delhi to London has been canceled due to a technical glitch.

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு தொடா் வலியுறுத்தல்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு உடனடியாக வெளியேற பாகிஸ்தானை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என மத்திய அரசு வெள்ளிக்கி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரை: மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமா்

தொடா்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.நாட்டின் சு... மேலும் பார்க்க

பணம் ஈட்டும் விளையாட்டுகள்: சிசிஐயிடம் கூகுள் முன்மொழிவு

இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் பணம் ஈட்டும் விளையாட்டுகளை அனுமதிக்க இந்திய தொழில் போட்டி ஆணையத்திடம் (சிசிஐ) கூகுள் நிறுவனம் முன்மொழிந்துள்ளது.இதுதவிர, இந்தியாவில் கூகுள் விளம்பர கொள்கையில் மாற்றங்க... மேலும் பார்க்க