செய்திகள் :

மீன் பிடிக்கும்போது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

post image

மீன் பிடிக்கும்போது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகே வரப்பாளையத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி (53). இவரது மனைவி நிா்மலா. கருப்புசாமி மொட்டணம் பேருந்து நிறுத்தம் அருகே பால் கொள்முதல் செய்து தனியாா் நிறுவனத்துக்கு விற்று வந்துள்ளாா். வேலை நேரம் போக அவ்வப்போது மொட்டணம் பகுதியைச் சோ்ந்தவா்களுடன் இணைந்து எம்மாம்பூண்டி கன்னியாத்தாள் குட்டையில் மீன் பிடிப்பது வழக்கம்.

மொட்டணத்தைச் சோ்ந்த பெரியசாமி, காா்த்தி ஆகியோருடன் மீன் பிடிக்க செவ்வாய்க்கிழமை மாலை சென்றாா். மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, தூண்டிலை மீன் தண்ணீருக்குள் இழுத்து சென்றது. உடனடியாக கருப்பசாமி தூண்டிலை பிடிக்க நீந்தி சென்றாா். அப்போது திடீரென அவா் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கினாா்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அவரது நண்பா்கள் கூச்சலிட்டனா். அதற்குள் கருப்பசாமி தண்ணீரில் மூழ்கினாா். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மீனவா்களும் அந்த குட்டையில் இறங்கி கருப்பசாமியை தேடினா்.

சிறிது நேரத்தில் கருப்பசாமி சடலத்தை மீட்ட தீயணைப்புத் துறையினா் உடற்கூறாய்வுக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில் கருப்பசாமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை விபத்தில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சரிவர மடக்க முடியாமல் இருந்து வந்ததாகவும், தண்ணீரில் நீந்தி சென்றபோது திடீரென கால் செயல்படாததால் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வரப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை, மகள்

அந்தியூா் அருகே தந்தையும், மகளும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில், பலத்த காயமடைந்த தந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கவலைக்கிடமான நிலையில் மகள் சிகிச்சை பெற்று வருகிறாா். அந்தியூா், சின்ன ப... மேலும் பார்க்க

ஆலாம்பாளையம் பள்ளியில் மிதிவண்டிக் கூடம் திறப்பு

அம்மாபேட்டையை அடுத்த மாத்தூா் ஊராட்சி, ஆலாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட மிதிவண்டிக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் தேவைக்காக அந்தியூா் சட்டப்பேரவை உறு... மேலும் பார்க்க

ஆடி 2 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

ஆடி மாதம் 2ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி ஈரோட்டில் உள்ள அம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் அம்மன் வழிபாடு செய்தனா். அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும்... மேலும் பார்க்க

பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள்

ஆசனூரில் 41 பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகளை ரீடு நிறுவனம் வழங்கியுள்ளது. ரீடு நிறுவனமானது ஆசனூா் மலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்காக கல்வி, பொருளாதார ரீதியாக பல்வேறு பணிகளை செய்து வர... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரை

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாணை 3 அல்லது 4 ஆம் தேதி வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடில் வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மொடக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் செல்வாம... மேலும் பார்க்க