செய்திகள் :

`முட்டி போடு டா' - கோவை சீனியர் மாணவரை சுற்றி சுற்றி தாக்கிய ஜூனியர் மாணவர்கள்

post image

கோவை மாவட்டம், திருமலையம்பாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர் விடுதியில் முதுகலை சீனியர் மாணவர் ஒருவரை, இளங்கலை மாணவர்கள் கூட்டாக சேர்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AI Image

அந்த வீடியோவில் விடுதி அறையில் சீனியர் மாணவரை முட்டி போட வைத்து.. “இனிமேல் இப்படி பண்ண மாட்டேனு சொல்லு.” என்று அடித்து மிரட்டுகிறார்கள். அந்த மாணவர், “வலிக்கிறது” என்று கைக்கூப்பி அழும்போதும் ஜூனியர் மாணவர்கள் விடாமல், “முட்டி போடு.. இல்லைனா போலீஸ்கிட்ட சொல்லிடுவோம்.” என்று மிரட்டி தாக்குகிறார்கள். முதல்கட்ட தகவல்படி சீனியர் மாணவர், ஜூனியர் மாணவர்களின் அறையில் பணம் எடுத்ததாக சந்தேகப்பட்டுத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து அந்தக் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “எம்.ஏ படிக்கும் மாணவர் பணத்தைத் திருடிவிட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஜூனியர் மாணவர்கள் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் எங்களிடம் புகார் அளித்தனர்.

சஸ்பெண்ட்

அதனடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட 13 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையிலும் தகவல் கொடுத்துள்ளோம். நாளை (24.3.25) அந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை அழைத்து விசாரணை செய்ய உள்ளோம்.” என்று கூறியுள்ளனர்.

மதுரை: இயக்குநர் வீட்டில் களவு; `5 நாள்களாகியும் விசாரணை இல்லை...' - காவல்துறை மீது குற்றச்சாட்டு!

எழுத்தாளரும் இயக்குநருமான லக்ஷ்மி சரவணக்குமார் தனது வீட்டில் பணம், நகை திருடப்பட்டுவிட்டதாகவும், அது குறித்து புகார் அளிக்கப்பட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.தனியாக வாழும்... மேலும் பார்க்க

சிவகங்கை: பயிற்சி மருத்துவருக்குப் பாலியல் தொல்லை; நள்ளிரவு மருத்துவக் கல்லூரியில் என்ன நடந்தது?

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து நேற்று (மார்ச் 24) இரவு விடுதிக்குச் சென்ற பயிற்சி மருத்துவர் மீது பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க

சென்னை: ஒரே நாளில் `பல' செயின் பறிப்புச் சம்பவங்கள்; அலறிய வாக்கி டாக்கிகள் - சிக்கிய உபி இளைஞர்கள்!

சென்னை, திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இருவர், பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க செயினைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில்... மேலும் பார்க்க

`பல பெண்களுடன் தொடர்பு; பெரும் சித்ரவதை, எனவேதான்...' - தாயுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் `பகீர்!'

பெங்களூரு புறநகர் பகுதியான சிக்கவனபாரா என்ற இடத்தில் தனியாக நின்ற காரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மீட... மேலும் பார்க்க

காதலனுடன் சேர திட்டம்; திருமணமான இரண்டு வாரங்களில் கணவனை ஆள்வைத்து கொன்ற மனைவி! - சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம், அவுரையா என்ற இடத்தை சேர்ந்த திலிப் என்பவர் பிரகதி (22) என்ற பெண்ணை கடந்த 5ம் தேதிதான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு மாதத்திற்குள் அதாவது கடந்த 19ம் தேதி திலிப் அங்குள்ள ஒர... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்டதற்கு என்ன காரணம்? - சிபிசிஐடி-க்கு வழக்கு மாறிய பின்னணி

சென்னை கீழ்ப்பாக்கம் தாமோதர மூர்த்தி சாலையில் உள்ள வீட்டில் குடியிருக்கிறார் யூடியூபர் சவுக்கு சங்கர். இவரின் அம்மா கமலா. பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது தமிழகம் முழுவதும் உள்ள காவ... மேலும் பார்க்க