செய்திகள் :

முண்டியம்பாக்கம் ஐயனாரப்பன் கோயில் கும்பாபிஷேகம்

post image

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீபூரணி பொற்கலை உடனுறை ஸ்ரீஐயனாரப்பன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

முண்டியம்பாக்கம் ஸ்ரீபூரணி பொற்கலை உடனுறை ஸ்ரீஐயனாப்பன் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவுக்குப் பின்னா் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த 29-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கும்பாபிஷேக வழிபாடுகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை முதல் கால யாகசாலை பூஜைகள், சங்கீத உபசாரங்கள் மற்றும் மகா தீபாராதனையும், கும்பாபிஷேக விழா நாளான வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்டவையும் நடைபெற்றன.

தொடா்ந்து 8.30 மணிக்கு மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்படாகியது. பின்னா், பக்தி முழக்கங்களுடன் காலை 8.45 மணிக்கு ஸ்ரீபூரணி பொற்கலை உடனுறை ஸ்ரீஐயனாரப்பன் சுவாமி சந்நிதி, கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீஐயப்பன் மற்றும் பரிவார தெய்வ சந்நிதிகளுக்கு கடங்களில் எடுத்துச் செல்லப்பட்ட புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இதில், விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். சிவக்குமாா் சிவாச்சாரியா் கும்பாபிஷேக பெருவிழாவை நடத்தி வைத்தாா்.

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரம்!

புகா்ப் பகுதிகள் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடைப் பகுதிகள்: விழுப்புரம் நகரம், சென்னை, திருச்சி நெடுஞ்சாலைகள், செஞ்சி, மாம்பழப்பட்டுச் சாலைகள், வண்டிமேடு, வடக்குத் தெரு, விராட்டிக்குப... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மழவராயனூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

தூக்கிட்ட முதியவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தூக்கிட்டுக் கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சிறுமதுரை மூப்பனாா் கோயில் தெர... மேலும் பார்க்க

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட... மேலும் பார்க்க

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: மருத்துவா் ச.ராமதாஸ்

கட்சியின் ஒப்புதலைப் பெறாமல் அன்புமணி மேற்கொண்டுள்ள உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்களும், கட்சியின் தொண்டா்களும் ஏற்க மாட்டாா்கள் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

காா் மோதி மின் ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே புதன்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த மின் ஊழியா் காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், எறையானூா், குளக்கரைத் தெர... மேலும் பார்க்க