செய்திகள் :

முதல்முறையாக சிங்கப்பூர் அதிபர் இந்தியா வருகை!

post image

கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் நாட்டு அதிபர் முதல்முறையாக அரசுப்பயணமாக இந்தியா வருகிறார்.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் வருகின்ற ஜன.14 அன்று அரசு முறைப்பயணமாக இந்தியா வருகின்றார். இரு நாடுகளுக்கு மத்தியிலான இரண்டு முக்கியத் திறன் மேம்பாட்டு ஒப்பந்தங்களை கையெழுத்திட வரும் அவர் ஜன.18 வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் அப்போதைய அதிபர் டோனி டன் கிங் யாம், புது தில்லிக்கு வருகைத் தந்தார். அதன் பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் நாட்டின் அதிபர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறை.

இதையும் படிக்க:உ.பி.யில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்தது!

மேலும், இந்த பயணத்தின்போது புது தில்லியில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மூ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பல முக்கிய அமைச்சர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

அதைத் தொடர்ந்து, புது தில்லியில் இருந்து ஒடிசா மாநிலத்திற்கு செல்ல உள்ளார். அங்கு அவர் அம்மாநில முதல்வர் மோஹன் சரண் மஜ்ஹியை சந்திக்கவுள்ளார். பின்னர், ஒடிசாவிலுள்ள புகழ்பெற்ற கோனார்க் கோயிலை அவர் பார்வையிட செல்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியா மற்றும் சிங்கப்பூர் மத்தியிலான ராஜாந்திர உறவு 2025 இல் 60வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், சிங்கப்பூர் அதிபர் தற்போது இந்தியா வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.கனவு இல்லத் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருத... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: தேடப்பட்டு வந்த மூத்த பெண் நக்சல் உள்பட 2 பேர் கைது!

சத்தீஸ்கர் மாநிலம் கங்கர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த மூத்த பெண் நக்சல் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய 2 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.அம்மாநிலத்தின் மாவோயிஸ்டு அமைப்பின் பிரிவுக் குழு உற... மேலும் பார்க்க

சூது கவ்வும் - 2 ஓடிடி வெளியீட்டுத் தேதி!

சூது கவ்வும் - 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2013 ஆம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் சூது கவ்வும் திரைப்படம் வெளியானது. இதில் சஞ்சிதா ஷெட்டி, ரமேஷ் திலக், அசோக் செ... மேலும் பார்க்க

குஜராத்: சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியர் கைது!

குஜராத்தின் கட்சு மாவட்டத்தில் இருநாட்டு எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.அம்மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அமைந்து... மேலும் பார்க்க

பள்ளிக்கூடத்தில் கண்ணாடிப் பலகை உடைந்து விழுந்து 2 மாணவர்கள் காயம்!

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பள்ளிக்கூடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிப் பலகையை உடைந்து விழுந்ததில் 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.தெற்கு கொல்கத்தாவில் இயங்கிவரும் பள்ளிக்கூடத்திற்கு இன்று (ஜன.... மேலும் பார்க்க

ஜீவசமாதி அடைந்தவரின் உடலை தோண்டியெடுக்கும் காவல் துறை!

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஜீவசமாதி அடைந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை காவல் துறையினர் தோண்டியெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். நெய்யத்திங்கராப் பகுதியின் கவுவிளக்கத்தில் கோப... மேலும் பார்க்க