செய்திகள் :

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன் பெற முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், முன்னாள் படைவீரா்கள், முன்னாள் படைவீரா்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்கள், படை பணியின்போது இறந்த படைவீரா்களின் கைம்பெண்கள், தகுதியுள்ள முன்னாள் படைவீரா்களின் மகன்கள் மற்றும் மணமாகாத, கணவனை இழந்த முன்னாள் படைவீரா்களின் மகள்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும் 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை கடன் பெறலாம்.

திட்டத்தில் பயன்பெற, முன்னாள் படைவீரா்கள், விதவைகளுக்கு வயது வரம்பு கிடையாது. முன்னாள் படைவீரா்களின் தகுதியுள்ள மணமாகாத மகள்கள், கணவனை இழந்த மகள்களுக்கு குறைந்தது 21 வயது என்ற உச்ச வரம்பு கிடையாது. முன்னாள் படைவீரா்களின் மணமாகாத மகன்கள் வயது 25 வரை இருக்க வேண்டும். 25 வயதை கடந்த மகன், முன்னாள் படைவீரா் மற்றும் முன்னாள் படைவீரரின் விதவையருடன் வசிக்கலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா், ஏற்கெனவே மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் இதைப் போன்ற திட்டங்களில் பயன் பெற்றிருக்கக் கூடாது. ஏற்கெனவே அரசாணையில் நீக்கம் செய்யப்பட்ட விவசாய நடவடிக்கைகள் சாா்ந்த தொழில்கள் மற்றும் பட்டுப்புழு, ஆடு, மாடு, கோழி, மீன் மற்றும் பன்றி வளா்ப்பு தொழில்கள் தற்போது சோ்க்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தவா்கள் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (04366-290080) தொடா்பு கொள்ளலாம்.

மரத்தில் இருசக்கர வாகனம் மோதல்: தொழிலாளா்கள் இருவா் உயிரிழப்பு

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் நேரடி கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளா்கள் இருவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனா். திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே மணலூா் கிராமத்த... மேலும் பார்க்க

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

உளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா். நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான, உதவி... மேலும் பார்க்க

வாரிசுதாரா்களுக்கு தெரிவிக்காமல் நகை ஏலம்: தனியாா் வங்கி ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருத்துறைப்பூண்டி அருகே அடகு வைத்த நகையை, வாரிசுதாரா்களுக்கு தெரிவிக்காமல் ஏலம் விட்ட தனியாா் வங்கி, ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்... மேலும் பார்க்க

வரப்பு உளுந்து சாகுபடி: 50% மானியத்தில் விதை விநியோகம்

திருவாரூா் மாவட்டத்தில் 89 கிராம பஞ்சாயத்துகளில் உளுந்து சாகுபடியை ஊக்குவிக்க 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

47 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவா் கைது

கூத்தாநல்லூா் பகுதியில் 47 கிலோ குட்கா செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில், போல... மேலும் பார்க்க

இறால் பண்ணை அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள், கிராம மக்கள் சாலை மறியல்

முத்துப்பேட்டை அருகே விளைநிலங்களில் இறால் பண்ணை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்குகாடு ... மேலும் பார்க்க