செய்திகள் :

முதல்வர் ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்குச் செல்லாததற்கு இதுதான் காரணமாம்..!

post image

சென்னை: தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்குச் செல்லாததற்கு என்ன காரணம் என்பதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

முதல்வர் மு. க. ஸ்டாலின் கடந்த சில நாள்களுக்கு முன்னர் உடல்நலம் குன்றியதால் சென்னையிலுள்ளதொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை முடிந்து இன்று(ஜூலை 27) வீட்டுக்குத் திரும்பினார்.

முன்னதாக, பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியபோது, “தமிழகத்தில் முதல்வர் உள்பட, நம்பிக்கையுடன் சென்று சிகிச்சை பெறும் அளவுக்கு அரசு மருத்துவமனைகள் இல்லையே என்பது எனது ஆதங்கம். அபோலோ தரத்துக்கு அரசு மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை நான் வெளிப்படுத்துகிறேன். இதில் அரசியல் இல்லை” என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்றால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். அதனால்தான், முதல்வர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்" என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “அண்மையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரின் மனைவிகூட கோவையில் உள்ளதொரு தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார். பிரதமரின் சகோதரர்கூட தமிழகத்தில் தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார்.

அரசு மருத்துவமனைகளின் தரம் மிக சிறப்பாகவே இருக்கிறது. அரசு மருத்துவச் சேவை, தனியார் மருத்துவச் சேவை என்று பிரித்துப் பார்க்கக் கூடாது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆகஸ்ட் 2-இல் நடைமுறைக்கு வரவுள்ள 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம், மக்களை மிகப்பெரிய அளவில் கவரும். இத்திட்டத்தில் முழு உடல் பரிசோதனை செய்யலாம். தனியாரிடம் ரூ. 15,000 முதல் 20,000 ஆயிரம் வரை செலவாகும் பரிசோதனைகளை அரசு மருத்துவமனைகளில் ரூ. 4,000-க்கு மேற்கொள்ளலாம். இருபாலருக்கும் பல்வேறு வகையான புற்றுநோய்களைக் கண்டறியும் பரிசோதனைகளும் நடத்தப்படவிருக்கின்றன" என்றார்.

This is the reason why CM Stalin did not go to the government hospital!

தொடர் மழையால் முடங்கிய உதகை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடல்!

நீலகிரி மாவட்டம், உதகையில் தொடா்ந்து பெய்துவரும் கனமழையால் இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடப்பட்டுள்ளன. மழையுடன் பலத்த வேகத்தில் காற்றும் வீசுவதால் தொட்டபெட்டா, பைன் மரக் காடு உள்ள... மேலும் பார்க்க

தில்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

திருச்சியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி தில்லி புறப்பட்டார். மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு தமிழகம் வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர்... மேலும் பார்க்க

சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

கங்கை கொண்ட சோழபுரத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய இளையாராவை பிரதம் மோடி மிகவும் பாராட்டி பேசியுள்ளார். கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் நிறைவு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்த ந... மேலும் பார்க்க

ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்ட... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கருவறையான பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடத்தினார். கோயிலில் சிவாச்சாரியார்க... மேலும் பார்க்க