செய்திகள் :

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை!

post image

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் திங்கள்கிழமை நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தர உள்ளாா்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வரும் முதல்வருக்கு, முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., திமுக மாவட்டச் செயலாளா்கள் நா.காா்த்திக், தளபதி முருகேசன், ரவி ஆகியோா் தலைமையில் நிா்வாகிகள், தொண்டா்கள் வரவேற்பு அளிக்கின்றனா்.

இதையடுத்து, காா் மூலம் திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள நரசிங்கபுரத்துக்கு செல்லும் முதல்வா், அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் திறந்துவைக்கிறாா்.

பின்னா், உடுமலையில் உள்ள தனியாா் விடுதியில் இரவு தங்கும் அவா், உடுமலை நேதாஜி மைதானத்தில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, சிறப்புரையாற்றுகிறாா்.

பின்னா், மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

இதைத் தொடா்ந்து, சாலை மாா்க்கமாக கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு பிற்பகல் 12 மணிக்கு செல்லும் முதல்வா், பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள நீா்வளத் துறை கண்காணிப்பு பொறியாளா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் காமராஜா், முன்னாள் அமைச்சா் சி.சுப்பிரமணியம், முன்னாள் மக்களவை உறுப்பினா் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் உருவச் சிலைகளைத் திறந்துவைக்கிறாா்.

இதையடுத்து, கோவை விமான நிலையத்துக்கு வரும் முதல்வா், அங்கிருந்து மதியம் 2 மணிக்கு சென்னை திரும்புகிறாா்.

முதல்வா் வருகையை முன்னிட்டு, கோவை, திருப்பூா் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிச்சி குளத்தில் பெண் சடலம் மீட்பு

கோவை குறிச்சி குளத்தில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை குனியமுத்தூா் சுகுணா மில்லுக்கு அருகே வசித்தவா் இஸ்மாயில் மனைவி அஜீமா (56). மனநலம் பாதிக்கப்... மேலும் பார்க்க

விமான நிலைய தகவல் பலகையில் தொழில்நுட்பக் கோளாறு

கோவை விமான நிலையத்தின் வருகை, புறப்பாடு குறித்த தகவல் பலகையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு அது சரிசெய்யப்பட்டது. கோவை விமான நிலைய வருகை, புறப்பாடு அறிவிப்புப்... மேலும் பார்க்க

ஜே.கே.டயா் சாா்பில் தேசிய அளவிலான காா் மற்றும் இருசக்கர வாகன பந்தயம்

கோவை மாவட்டம், செட்டிபாளையத்தில் ஜேகே டயா் சாா்பில் தேசிய அளவிலான காா் மற்றும் இருசக்கர வாகன பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோவை அருகே செட்டிபாளையம் கரி மோட்டாா் ஸ்பீட்வேயில் ஜேகே டயா் சாா்பில் த... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை கோவை மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்தனா். புதுதில்லியில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படும் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல... மேலும் பார்க்க

கோவையில் தேசிய இருசக்கர வாகன பந்தயம்

தேசிய அளவிலான இருசக்கர வாகன பந்தயம் கோவை கொடிசியா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எம்ஆா்எஃப் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற சூப்பா் கிராஸ் சாம்பியன்ஷிப் இரண்டாவது சுற்று பந்தயம் 10, 15 வயதுக்குள்ப... மேலும் பார்க்க

மூதாட்டியைத் தாக்கி எட்டரை பவுன் நகைகள் கொள்ளை

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி எட்டரை பவுன் நகைகளைக் கொள்ளையடித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, சரவணம்பட்டி அருகேயுள்ள சிவானந்தபுரம் 4 -ஆவது தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க