செய்திகள் :

முதல் முறை... டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய பேட்டர்கள் புதிய சாதனை!

post image

இந்திய அணியின் பேட்டர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 31 ஆம் தேதி முதல் ஓவலில் தொடங்குகிறது.

இந்திய பேட்டர்கள் சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டர்கள் நான்கு பேர் 400 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளனர். டெஸ்ட் தொடர் ஒன்றில் இந்திய வீரர்கள் நான்கு பேர் 400 ரன்களைக் கடப்பது இதுவே முதல் முறையாகும்.

இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், துணைக் கேப்டன் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா நான்கு பேரும் 400 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளனர்.

இந்த டெஸ்ட் தொடரில் கேப்டன் ஷுப்மன் கில் (722 ரன்கள்), கே.எல்.ராகுல் (511 ரன்கள்), ரிஷப் பந்த் (479 ரன்கள்), ரவீந்திர ஜடேஜா (454 ரன்கள்) எடுத்துள்ளனர்.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்திய அணியின் முடிவு சரியே; ஆதரவளிக்கும் முன்னாள் வீரர்கள்!

The Indian team's batsmen have set a new record in Test cricket.

5-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? - பயிற்சியாளர் பதில்

5-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? என்பதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் பதில் அளித்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ய கடைசி டெஸ்ட்டில் வெற்... மேலும் பார்க்க

கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் விலகல்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சந்திரகாந்த் பண்டித் விலகியுள்ளார்கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு முன்பாக சந்திரகாந்த் பண்டித், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின... மேலும் பார்க்க

மறைப்பதற்கு ஒன்றுமில்லை, ஏமாற்றமடைந்தேன்; கடைசி டெஸ்ட்டில் இடம்பெறாதது குறித்து நாதன் லயன்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இடம்பெறாதது ஏமாற்றமளித்ததாக ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்... மேலும் பார்க்க

தொட்டாற்சிணுங்கி கம்பீர்..! மோதலில் ஈடுபட்ட கம்பீர் - ஓவல் திடலின் பிட்ச் மேற்பார்வையாளர்!

இந்திய அணியின் பயிற்சியாளர் ஓவல் திடலின் பிட்ச் மேற்பார்வையாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது பேசுபொருளாகியுள்ளது. ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது... மேலும் பார்க்க

டாம் லாதம் விலகல்; டெஸ்ட் அணியின் கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமனம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது... மேலும் பார்க்க

கடைசி டெஸ்ட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும்: ஸ்டுவர்ட் பிராட்

இந்தியாவுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கில... மேலும் பார்க்க