செய்திகள் :

முதியவா் தீக்குளிக்க முயற்சி

post image

ஒட்டன்சத்திரம் அரசுக் கல்லூரிக்கான சுற்றுச்சுவா் கட்டும்போது, ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வண்டிப் பாதையை நீதிமன்ற உத்தரவின்படி மீட்டுத் தரக் கோரி முதியவா் தீக்குளிக்க முயன்றாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கேவிபி நகரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (73). குறைதீா் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்த இவா், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திடீரென டீசலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா், அவரைத் தடுத்து விசாரித்தனா்.

அப்போது, முதியவா் பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசு மகளிா் கல்லூரிக்கான சுற்றுச் சுவா் கட்டும்போது, என் நிலத்துக்கு செல்லும் வண்டிப் பாதைக்கான 11 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துட்டனா். இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதில், வண்டிப் பாதைக்கான நிலத்தை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை நிலம் ஒப்படைக்கப்படவில்லை. இதுதொடா்பாக பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தாா். அவரை தாடிக்கொம்பு போலீஸாா் விசாரணைக்காக ழைத்துச் சென்றனா்.

காவல் ஆய்வாளருக்கு எதிராக ஆட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் மறியல்

கோயில் திருவிழா பிரச்னையில் மதம் மாற வலியுறுத்தியதாக காவல் ஆய்வாளா் மீது புகாா் தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க

ரூ.29 லட்சம் பறிப்பு சம்பவம்: சிறுவன் உள்பட 4 போ் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, ஏடிஎம்-மில் வைப்பதற்காக கொண்டு சென்ற, ரூ. 29 லட்சத்தை கத்தியைக் காட்டி மிரட்டிப் பறித்த சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி ம... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே செந்நாய்கள் கடித்து 4 மாடுகள் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு செந்நாய்கள் கடித்ததில் 4 மாடுகள் உயிரிழந்தன. கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் பகுதியில் மேய்ச்சல் நிலங்கள்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: மரம் விழுந்து 4 மின் கம்பங்கள் சேதம்

கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழையால், அப்சா்வேட்டரி பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை மரம் சரிந்து விழுந்ததில் நான்கு மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதி இருளில்... மேலும் பார்க்க

25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பட்டாவுக்கு இடம் வழங்கக் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கு இடம் வழங்க பயனாளிகள் கோரிக்கை விடுத்தனா். செம்பட்டி அருகே சீவல்சரகு ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில்... மேலும் பார்க்க

சுற்றுலாப் பயணியிடம் பையை பறித்து சென்று பணத்தை வீசி எறிந்த குரங்கு

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணியிடமிருந்து பணப் பையை பறித்துச் சென்று மரத்தில் ஏறிய குரங்கு ஒன்று அங்கிருந்து பணத் தாள்களை கீழே வீசி எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கொடைக்கானல் குணா குகைப் பகுதியை கண்ட... மேலும் பார்க்க