செய்திகள் :

முதுகுளத்தூர்: டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் பலி; ரேஷன் பொருள்கள் வாங்கி வரும் போது நடந்த சோகம்..

post image

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது கூவர் கூட்டம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 80 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் நியாயவிலை கடை இல்லாத நிலையில் அருகில் உள்ள சின்ன பொதிகுளம் கிராமத்திற்கு சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வருவது வழக்கம். இந்நிலையில் கூவர் கூட்டத்தை சேர்ந்த சிலர் ரேஷன் பொருள்களை வாங்க டிராக்டர் ஒன்றில் சென்றனர்.

விபத்துக்குள்ளான டிராக்டர்

நேற்று மதியம் ரேஷன் பொருள்களை வாங்கி கொண்டு அந்த டிராக்டரில் 15-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சின்ன பொதிகுளம் கண்மாய் அருகே சென்று கொண்டிருந்த டிராக்டர், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்மாய் கரையில் கவிழ்ந்தது.

சிதறி கிடந்த ரேஷன் பொருட்கள்

இதில் டிராக்டரில் பயணம் செய்த கூவர் கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் (65), ராக்கி (65) மற்றும் பொன்னம்மாள் (60) ஆகிய பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் டிராக்டரில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த முதுகுளத்தூர் தீயணைப்பு அலுவலர் மாடசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு முதுகுளத்தூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிரிழந்த பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், உடல்களை வாங்க மறுத்து கூவர் கூட்டம் கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிவாரணம் கோரி போராட்டம்

கிராமத்திற்கு சாலை வசதி, நியாய விலை கடை ஆகிய வசதிகளுடன் விபத்தில் இறந்த பெண்களுக்கு நிவாரண நிதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களிடம், பரமக்குடி சார் ஆட்சியர் சரவண பெருமாள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். இந்த விபத்து குறித்து இளம்செம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ரேஷன் பொருட்கள் வாங்க சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரண நிதியினையும் அறிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதி: திடீரெனப் பரவிய காட்டுத்தீ; தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டதா?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தில் திடீரென காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயத்தையும், மேகமலை புலிகள் சரணாலயத்த... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பள்ளிக்கட்டிடம் இடிந்து 4 குழந்தைகள் பலி; இடிபாடுகளில் 17 பேர் காயம்.. என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம் ஜலவார் மாவட்டத்தில் உள்ள மனோஹர் பிப்லோதி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த அரசு பள்ளிக்கட்டிடம் இன்று காலையில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்தபோது 40 மாணவர்கள், குழந்... மேலும் பார்க்க

Russia விமான விபத்து: ஒட்டுமொத்தமாக 49 பேர் உயிரிழப்பு - விபத்துக்கான காரணம் என்ன?

கடந்த திங்கள்கிழமை ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் 49 பயணிகளுடன் சென்ற விமானம் சீன எல்லை அருகே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்திலிருந்த அனைவருமே உயிரிழந்துள்ளனர் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் ரஷ்ய ... மேலும் பார்க்க

நீலகிரி: 60 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர்; விபரீதத்தில் முடிந்த வழுக்கு மரம் போட்டி!

நீலகிரி மாவட்டம் குன்னூர், சேலாஸ் அருகில் அமைந்திருக்கிறது மேல் பாரதி நகர். ஊரில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வந்திருக்கிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக பாரம்பர்ய சாகச போட்டிகளில் ஒன்றான வழ... மேலும் பார்க்க

கூடலூர்: யானை மிதித்து உயிரிழந்த தொழிலாளி; யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் பலியாகும் அப்பாவிகள்..

யானை - மனித எதிர்கொள்ளல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிகழ்ந்து வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில் மேலும் ஒரு உயிர் பறிபோயிருக்கும் துயரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டே... மேலும் பார்க்க

கழுத்தில் செயின் அணிந்து MRI ஸ்கேன் எடுக்க சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு.. என்ன நடந்தது?

`Final Destination Bloodlines படத்தில் ஒரு காட்சியில், கற்பனைக் கூட செய்ய முடியாதளவு எம்.ஆர்.ஐ ஸ்கேனில் ஒருவர் கொடூரமாக உயிரிழப்பார். அதுபோன்றதொரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. நியூயார்க்கின்... மேலும் பார்க்க