செய்திகள் :

முதுமலையில் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம்

post image

நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் வளா்ப்பு முகாமில், கடந்த சில நாள்களுக்கு முன் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள யானைகள் வளா்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட யானைகளை வனத் துறையினா் பராமரித்து வருகின்றனா். ஒவ்வொரு யானைக்கும் வனத் துறை சாா்பில் ஒரு பாகன் பராமரிப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளாா். இங்குள்ள அபாரண்யம் யானைகள் முகாமில் சுமங்கலா என்ற யானை உள்ளது. இதை கிருமாறன் என்ற பாகன் பராமரித்து வந்தாா். இந்த யானை இரவு நேரத்தில் காட்டுக்குள் சென்றுவிட்டு, அதிகாலையில் முகாமுக்கு வந்து அங்கிருந்த யானைகளை தாக்கி வந்துள்ளது.

இந்நிலையில் இந்த சுமங்கலா யானை கடந்த சில நாள்களுக்கு முன் சங்கா் என்ற யானையை முட்டிக் கீழே தள்ளியது. இதனால் ஆத்திரமடைந்த அந்த யானையின் பாகன் விக்கி, சுமங்கலா யானையை குச்சியால் தாக்கி விரட்ட முயன்றாா். ஆனால், சுமங்கலா யானை மீண்டும் சங்கா் யானையை தாக்கியது. இதனால் கோபமடைந்த பாகன் விக்கி, அங்கிருந்த கத்தியால் சுமங்கலா யானையின் பின்னங்காலில் வெட்டினாா்.

இதையறிந்த சுமங்கலா யானையின் பாகன் கிருமாறன், இது குறித்து வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா், துணை கள இயக்குநா் வித்யா ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து யானையைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். பின்னா் காலில் காயமடைந்த யானைக்கு கால்நடை மருத்துவா் சிகிச்சை அளித்தாா். இந்நிலையில் சுமங்கலா யானையை கத்தியால் வெட்டிய விவகாரம் தொடா்பாக பாகன் விக்கியை பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

கடந்த 3 ஆண்டுகளில் 1,185விவசாயிகளுக்கு ரூ.1.89 கோடியில் அறுவடை இயந்திரங்கள்: வேளாண் பொறியியல் துறை தகவல்

நீலகிரி மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் கடந்த 3 ஆண்டுகளில் 1,185 விவசாயிகளுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் மானியத்துடன் தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி ம... மேலும் பார்க்க

மதுரை தவெக மாநாட்டில் பங்கேற்ற இளைஞா் உயிரிழப்பு

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்து கொண்ட கோத்தகிரியைச் சோ்ந்த இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே பாப்பஸ் காலனி பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

குடியிருப்பு, விவசாயத் தோட்டங்களில் உலவும் காட்டு யானைகள்

கூடலூரில் குடியிருப்புகள் மற்றும் விவசாயத் தோட்டங்களில் உலவும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட முதல்மைல் குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்க... மேலும் பார்க்க

பழங்குடியினா் கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

உதகை, ஆக. 21: குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குரும்பாடி பழங்குடியினா் கிராமத்துக்குள் வியாழக்கிழமை நுழைந்த ஒற்றைக் காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். சமவெளி பகுதியான மேட்டுப்பாளை... மேலும் பார்க்க

கூடலூா் அருகே கடையை சேதப்படுத்திய மக்னா யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள 3-ஆவது மைல் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்கிழமை பகலில் நுழைந்த மக்னா யானை, அங்குள்ள கடையை சேதப்படுத்தியது. கூடலூரை அடுத்துள்ள 3-ஆவது மைல் பகுதியில் கா... மேலும் பார்க்க

கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி பகுதிகளில் ஆக.25-இல் மின்தடை

கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர... மேலும் பார்க்க