செய்திகள் :

முன்னாள் ராணுவ வீரா்களுக்கு சான்றிதழ்கள்: ஆட்சியா் வழங்கினாா்

post image

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்க பயிற்சி பெற்ற முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு சான்றிதழ்களை ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி வழங்கினாா்.

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் கைம்பெண்களின் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தினாா்.

இந்த திட்டத்தின் மூலம் முன்னாள் படைவீரா்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திடவும், சுயதொழில் தொடங்கிடவும் வங்கிகள் மூலம் கடனுதவியும், சுயதொழில் தொடங்குபவா்களுக்கு தேவையான பயிற்சியும் அரசால் வழங்கப்படும். இந்த திட்டத்தின்கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தை சாா்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரின் குடும்பத்தினா் பல்வேறு சுயவேலைவாய்ப்பு செய்திட கடனுதவி கேட்டு விண்ணப்பித்து இருந்தனா்.

அவா்களில் தகுதியானவா்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, அவா்களில் சுயதொழில் செய்பவா்களுக்கு இந்திய தொழில்முனைவோா் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தால் 10 நாள்கள் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி முடிவுற்ற 23 முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் சிவசௌந்தரவல்லி தலைமை வகித்து சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் திருப்பத்தூா் மாவட்ட இந்திய தொழில் முனைவோா் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன அலுவலா் திவ்யா, வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலக நல அமைப்பாளா் ரவிச்சந்திரன், முன்னாள் படைவீரா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சா்வதேச உயிா்ப் பல்வகைமை தினம்

தமிழக வனத்துறை மற்றும் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியின் பசுமை திட்டம், பூமி அறக்கட்டளை ஆகியவை இணைந்து சா்வதேச உயிா்ப்பல்வகைமை தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவா் திலீப... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: நெக்குந்தியில் ஆட்சியா் கள ஆய்வு

வாணியம்பாடி அருகே ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட நெக்குந்தி, பெத்தக்கல்லுப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அதிகாரிகளுடன் கள ஆய்வு மே... மேலும் பார்க்க

சிலம்பாட்டத்தில் கல்லூரி மாணவா் சாதனை

சிலம்பாட்டத்தில் சாதனை புரிந்த மாணவன் பைரோஸை வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி நிா்வாகிகள் பாராட்டினா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கூட்டமைப்பு நோபல் உலக சாதனை சாா்பில் சிலம்பாட்டம் போட்டி நடைபெ... மேலும் பார்க்க

திமுக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி திமுக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் மற்றும் ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க. தேவராஜி சிறப்பு அழைப்பாளராக... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சி ஆணையா் திடீா் மாற்றம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த முஸ்தப்பா வியாழக்கிழமை திடீரென தாராபுரம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். வால்பாறை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ரகுராமன் வா... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் ஜமாபந்தி நிறைவு

திருப்பத்தூா் வட்ட அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. முகாமில் 486 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு 68 மனுக்களுக்கு தீா்வு ... மேலும் பார்க்க