செய்திகள் :

மும்பையில் எக்ஸ்பிரஸ் ரயில் குப்பைத் தொட்டியில் 4 வயது சிறுவனின் உடல் கண்டெடுப்பு

post image

மும்பையில் எக்ஸ்பிரஸ் ரயில் கழிப்பறையின் குப்பைத் தொட்டியில் இருந்து 4 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூருக்கும் எல்டிடி-க்கும் இடையே தினமும் குஷிநகர் எக்ஸ்பிரஸ் இயங்கி வருகிறது. இந்த ரயிலின் குளிர்சாதனப் பெட்டி கழிப்பறைக்குள் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் நான்கு வயது சிறுவனின் உடல் சனிக்கிழமை அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், துப்புரவுப் பணியின் போது காலை 6 மணியளவில் எக்ஸ்பிரஸின் பி2 பெட்டியின் கழிப்பறைகளில் ஒன்றில் சிறுவனின் உடலை துப்புரவு ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 10,850 கன அடியாக சரிவு!

ரயில்வே பாதுகாப்புப் படை உடனடியாக அரசு ரயில்வே காவல்துறையை தொடர்பு கொண்டு உடல் மீட்கப்பட்டது குறித்து புகார் அளித்தனர்.

இந்த விவகாரம் குறித்து அரசு ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. உடல் மீட்கப்பட்ட பிறகு ரயில்வே பாதுகாப்புப் படை புகார் அளித்துள்ளது என்றார். மும்பையிலிருந்து வட இந்தியாவை இணைக்கும் பிரபலமான ரயில்களில் குஷிநகர் எக்ஸ்பிரஸ் ஒன்றாகும்.

The body of a four-year-old boy was found in a garbage bin kept inside the toilet of an express train at the Lokmanya Tilak Terminus (LTT) in Mumbai early on Saturday, officials said.

நாட்டின் சட்டக்கல்வி வலுப்பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘நாடு முழுவதும் ஏராளமான மாணவா்கள் சட்டக் கல்வியைப் பயிலும் நிலையில், அதை வலுப்படுத்துவதில் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். கோ... மேலும் பார்க்க

திரிணமூல் எம்.பி.யை கீழே தள்ளியதாக மத்திய அமைச்சா் மீது குற்றச்சாட்டு: மக்களவைத் தலைவருக்கு கடிதம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முா்ஷிதாபாத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபு தாஹிா் கானை மத்திய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு கீழே தள்ளியதாக குற்றஞ்சாட்டி அவா் மீது நடவடிக்கை கோரி மக்களவைத் தலை... மேலும் பார்க்க

பல்வேறு மாநிலங்களில் மழை - வெள்ளம்: பிகாரில் ஆற்றில் மூழ்கி 5 போ் பலி

பிகாரின் பூா்னியா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஐந்து போ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூா்னியா மாவட்டத்தின் கஸ்பா பகுதியில் உள்ள கரி கோசி ஆற்றில்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகம் அருகே ‘சந்தேக’ நபா் கைது

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகே சனிக்கிழமை 20 வயது மதிக்கத்தக்க சந்தேகத்திற்கிடமான நபரை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரிகள் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அந்த நபரை சிஐ... மேலும் பார்க்க

திமுக, கூட்டணி எம்.பி.க்களை இன்று சந்திக்கிறாா் சுதா்சன் ரெட்டி

‘இண்டி’ கூட்டணி குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி, சென்னையில் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.க்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளாா். முன்னதாக, அவா் முதல்வரும் திமுக தலை... மேலும் பார்க்க

இந்தியா-ஆஸ்திரேலியா வா்த்தக ஒப்பந்தம்: 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே விரிவான வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடா்பான 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நிறைவடைந்தது. இருநாடுகளிடையே கடந்த 2022, டிசம்பரில் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் மே... மேலும் பார்க்க