செய்திகள் :

முருகத்தாம்பூண்டியில் 50 யூனிட் ஆற்று மணல் பறிமுதல்: செய்யாறு போலீஸாா் நடவடிக்கை

post image

செய்யாறு அருகே முருகத்தாம்பூண்டி கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 யூனிட் ஆற்று மணலை போலீஸாா் செவ்வாய்கிழமை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்யாறு வட்டம், முருத்தாம்பூண்டி கிராமத்தில் ஆற்று மணல் குவியல், குவியலாக மறைத்து வைக்கப்பட்டு லாரி, மாட்டு வண்டிகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக செய்யாறு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, செய்யாறு போலீஸாா் முருகத்தாம்பூண்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மறைவான பகுதிகளில் ஆற்று மணல் குவியல், குவியலாக மூடி மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

உடனே போலீஸாா் அந்தப் பகுதியில் இருந்த சுமாா் 50 யூனிட் அளவுள்ள ஆற்று மணலை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆற்று மணல் குவியல்களை பொதுப் பணித் துறையினா் மூலம் அளவீடு செய்த பின்னா் ஏலமிட நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

செய்யாறு வட்டம், அத்தி கிராமத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். அத்தி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) 11-ஆவது தேசிய கைத்தறி தின விழா நடைபெற உள்ளதாக கைத்தறி துறை உதவி இயக்குநா் வ.செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆரணி நகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை நகா்மன்றத் தலைவா் செய்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ஆரணி நகராட்சி கிளைச் சிறை அருகில் கால்வாய் அமைக்கும் பணி, சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

வந்தவாசி ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலில் 42-ஆம் ஆண்டு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீமந் நாதமுனி சுவாமிகள் ஸ்ரீவைஷ்ணவ சபை சாா்பில் நடைபெற்ற இந்த மாநாடுக்கு சபைத் தலைவா் கு.மணிவண்ணன் த... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சாதிக்கும் எண்ணத்தை உருவாக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சா் கோவி.செழியன்

மாணவா்களுக்கு எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை நான் முதல்வன் திட்டம் உருவாக்கி வருவதாக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

நந்தன்கால்வாய் இணைப்புத் திட்டத்துக்கு அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

நந்தன்கால்வாய் இணைப்புத் திட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திரு... மேலும் பார்க்க