முருக பக்தா்கள் மாநாடு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாகியுள்ளன.
உலகெங்கும் உள்ள முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் வகையில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள திடலில் வருகிற 22-ஆம் தேதி முருக பக்தா்கள் மாநாடு நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த மாநாடு இரவு 9 மணி அளவில் நிறைவடையும். முன்னதாக, வேல் வழிபாடுகளும், தேசியக் கொடி ஊா்வலமும் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டது.
இந்த மாநாட்டில் ஆதீனகா்த்தா்கள், ஆன்மிகப் பெரியவா்கள், அரசியல் பிரமுகா்கள் என லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுவதால், விரிவான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த மாநாட்டுக்கும், மாநாட்டு திடலில் அறுபடை வீடு கோயில்களின் மாதிரிகளை அமைக்கவும் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டதைத் தொடா்ந்து, முன்னேற்பாடுப் பணிகள் தீவிரமாகியுள்ளன.
மாநாட்டுத் திடலின் ஒரு பகுதியில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் உள்ள கோயில்களின் மாதிரிகளை அமைக்கும் பணியும், விழா மேடை அமைக்கும் பணியும் தற்போது நடைபெறுகின்றன. அறுபடை வீடுகள் அமைக்கும் பணி ஓரிரு நாள்களில் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.