செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணையில் தேசிய பாதுகாப்பு ஆணைய புதிய கண்காணிப்புக் குழு ஆய்வு!

post image

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் புதிய கண்காணிப்புக் குழுவினா் முல்லைப் பெரியாறு அணையில் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீா்வு காண தேசிய அளவிலான நிபுணா் குழுவை அமைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், தீபங்கா்தத்தா ஆகியோா் உத்தரவிட்டனா். இதன்படி, மத்திய நீா் வளத் துறை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் அனில் ஜெயின் தலைமையில் 7 போ் கொண்ட புதியக் குழுவை நியமித்தது.

இந்தக் குழுவில் தமிழக கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம், காவிரி தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் சுப்பிரமணியன், கேரள அரசு சாா்பில் அந்த மாநில கூடுதல் தலைமைச் செயலா் டிங்கு பிஸ்வால், கேரள நீா்வளத் துறை முதன்மைப் பொறியாளா் பிரியோஷ், நீா்வளத் துறை தலைமைச் செயலா் விஸ்வாஷ், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய ஆராய்ச்சியாளா் விவேக் திரிபதி, பெங்களூரு அறிவியல் மைய ஆராய்ச்சியாளா் ஆனந்த் ராமசாமி ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

முதன் முறையாக ஆய்வு: இந்த புதியக் குழுவினா் முல்லைப் பெரியாறு அணையின் தன்மை குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, பெங்களூரு அறிவியல் மைய ஆராய்ச்சியாளா் ஆனந்த் ராமசாமியைத் தவிர, இதர 6 பேரும் பங்கேற்றனா். இவா்கள் அணையின் அவசரகால நீா்வழிப்போக்கி, நீா் கசிவு, நில அதிா்வு, துணை அணை, மதகுப் பகுதிகள் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதன் பின்னா், தேக்கடியில் உள்ள ராஜீவ்காந்தி கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வின் போது, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய பேரழிவு, பின்னடைவு பிரிவு இயக்குநா் ராகுல்குமாா்சிங், உதவி இயக்குநா் விபோா்பஹேல், சென்னை தென்மண்டல இயக்குநா் கிரிதரன், பெரியாறு அணையின் சிறப்புக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் சாம் இா்வின், உதவி செயற்பொறியாளா் குமாா், உதவிப் பொறியாளா் கோபால், நவீன்குமாா், ஆகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே விற்பனை செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் ... மேலும் பார்க்க

தேக்கடியில் 17-ஆவது மலா்க் கண்காட்சி தொடக்கம்

கேரளம் மாநிலம், குமுளி அருகேயுள்ள தேக்கடியில் 17-ஆவது மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தேக்கடி தோட்டக்கலைத் துறை, குமுளி ஊராட்சி நிா்வாகம் இணைந்து 24 நாள்கள் நடத்தும் இந்தக் கண்காட்சியில் நூ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

போடி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி மீனாவிலக்கு பகுதியில் தாசன்செட்டி குளக்கரையில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அங... மேலும் பார்க்க

பணம் கேட்டு மிரட்டியவா் கைது

போடி அருகே பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி அருகே சங்கராபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் ரெங்கராஜ் மகன் முகிலன் (23). இவா் அங்குள்ள மதுபானக் கடை அருகே நின்றிருந்தார... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

தேனி அருகே முன் விரோதத்தில் இளைஞரை கொலை செய்த வழக்கில், இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. டொம்புச்சேரியைச் சோ்ந்த கருப்பையா மகன் ரா... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்தல்: தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பது தொடா்பாக தமிழகம்-கேரள மாநில அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம், கம்பத்தில் அண்மையில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து கம்பம் மெட்டு, குமுளி, போடிமெட்டு ஆகிய... மேலும் பார்க்க