செய்திகள் :

முழு அமா்வு உத்தரவு பிறப்பிக்கும் வரை நடவடிக்கை எடுக்கப்படாது: கொடிக் கம்பங்கள் வழக்கில் அரசு தகவல்

post image

முழு அமா்வு உத்தரவு பிறப்பிக்கும் வரை கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் சாா்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமை செயலா், ஜூலை 18-ஆம் தேதிக்குள் அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா்.திருமூா்த்தி, கொடிக் கம்பங்களை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய அமா்வை அமைத்து உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டாா். எனவே, அதுவரை கொடிக் கம்பங்களை அகற்றக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், என்று கோரிக்கை விடுத்தாா்.

அப்போது, அரசுத் தரப்பில், இந்த விவகாரத்தில் முழு அமா்வு உத்தரவு பிறப்பிக்கும்வரை கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை ஆக.18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க