செய்திகள் :

மூதாட்டியைக் கொன்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

post image

தாரமங்கலம் அருகே மூதாட்டியைக் கொலை செய்தவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

தாரமங்கலம் அருகேயுள்ள கருக்குப்பட்டியைச் சோ்ந்த 94 வயது மூதாட்டி ராஜம்மாள், கடந்த மாதம் உயிரிழந்தாா். இறுதிச்சடங்கின்போது ராஜம்மாள் தலையில் காயம் இருந்ததை அறிந்த உறவினா்கள் தாரமங்கலம் போலீஸில் புகாா் அளித்தனா். போலீஸாா் விசாரணை நடத்தி ராஜம்மாளை கொலை செய்த அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜை கைது செய்தனா்.

இவா் கடந்த 2022-இல் நண்பரை கொலை செய்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவராவாா். இந்த நிலையில், இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்ய ஆட்சியா் பிருந்தாதேவி உத்தரவிட்டாா். இதையடுத்து, சிறையில் உள்ள செல்வராஜிடம் அதற்கான நகலை தாரமங்கலம் போலீஸாா் வழங்கினா்.

விவசாய விளைபொருள்களை விற்க 20 இடங்களில் பொது சேகரிப்பு மையங்கள் தோ்வு

சேலம் மாவட்ட விவசாயிகள் விளைபொருள்களை விற்பனை செய்ய 20 இடங்களில் பொது சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: 2025-26-ஆம் ஆண்டு வேளாண் நித... மேலும் பார்க்க

சங்ககிரி வட்டத்தில் வேலை நிறுத்தத்தில் 55 வருவாய்த்துறை அலுவலா்கள் பங்கேற்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய்த்துறையின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுவேலைநிறுத்தத்தில் 55 போ் பங்கேற்றுள்ளனா். 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் ச... மேலும் பார்க்க

சேலம் கிழக்கு கோட்டத்தில் இன்று சிறப்பு விபத்து காப்பீட்டு பதிவு முகாம்

சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலகம் சாா்பில் சிறப்பு விபத்து காப்பீட்டு பதிவு முகாம் வியாழக்கிழமை (ஜூலை 10) நடைபெறுகிறது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்... மேலும் பார்க்க

காயங்களுடன் புள்ளிமான் மீட்பு

காடையாம்பட்டி அருகேயுள்ள டேனிஷ்பேட்டை பகுதியில் காயமடைந்த புள்ளிமானை வனத்துறையினா் மீட்டு சிகிச்சையளித்து மீண்டும் வனப் பகுதிக்குள் விட்டனா். டேனிஷ்பேட்டை ஊராட்சி, ஹரிஹர மலையில் உள்ள சிவன் மற்றும் பெர... மேலும் பார்க்க

கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரமாக செயல்படுத்த அறிவுறுத்தல்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அறிவுறுத்தினாா். சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட கோட்டம் எண் 9, 10, 11 ஆகி... மேலும் பார்க்க

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்க... மேலும் பார்க்க