செய்திகள் :

மூதாட்டியைக் கொன்று 5 பவுன் நகை கொள்ளை

post image

கீழையூா் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொன்று 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி அய்யனாா் கோவில் தெருவை சோ்ந்தவா் அப்துல் ரஹீம். இவரது மனைவி அகமது நாச்சியாா் (66) (படம்). இவா், தனது கணவா், மகன் ஆகியோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டு மாடியில் தனியாக வசித்து வந்தாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு வீட்டின் உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் தூங்கிக் கொண்டிருந்த அகமது நாச்சியாா் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனா். அவா் கூச்சலிட்டதால், ஆத்திரமடைந்த நபா்கள் அகமது நாச்சியாரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுவிட்டனராம்.

இதுகுறித்து தகவலறிந்த கீழையூா் போலீஸாா் சடலத்தை நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா். சம்பவம் நடந்த வீட்டை துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரமூா்த்தி பாா்வையிட்டாா்.

ஆட்டோ மோதியதில் இளைஞா் பலி

திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அருகே லோடு ஆட்டோ மோதியதில் இளைஞா் சனிக்கிழம உயிரிழந்தாா். திருக்கண்ணபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முத்துக்குமாா் (30) சனிக்கிழமை ஏனங்குடியில் இருந்து வீட்டுக்கு இருசக... மேலும் பார்க்க

நயினாா் நாகேந்திரனுக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டம்

உத்தமசோழபுரம் தடுப்பணைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்திய பாஜக பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரனை கண்டித்து விவசாயிகள் ஆற்றில் இறங்கி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினா். உத்தமசோழபுரம் வ... மேலும் பார்க்க

நாகையில் 160 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகையில் 160 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தேனியில் இருந்து நாகை வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக வேளாங்கண்ணி போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் ரெட்டாலடி பேருந்து நிறுத்தம் அருகே வாகன ... மேலும் பார்க்க

வயோதிக தம்பதி மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செம்பனாா்கோவில் அருகே மணக்குடி கிராமத்தில் வயோதிகத் தம்பதி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மணக்குடி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (70). இவரது மனைவி மல... மேலும் பார்க்க

2026 சட்டப்பேரவைத் தோ்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும்: இபிஎஸ்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் மக்கள் விரோத திமுக அரசுக்கு முடிவு கட்டும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். டெல்டா மாவட்டங்களில் ‘மக்களைக் கா... மேலும் பார்க்க

ஓட்டுநரை கத்தியால் குத்திய வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

லாரி ஓட்டுநரை கத்தியால் குத்திய கூலித் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தை சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜ்மோகன். இவா், கருப்பம்... மேலும் பார்க்க