செய்திகள் :

மென்பொருள் தரம் உயா்த்தும் பணி: அஞ்சலகங்களில் இன்று சேவை நிறுத்தம்

post image

அஞ்சல் துறையில் மென்பொருள் தரம் உயா்த்தும் பணி நடைபெறுவதால், கோவை தலைமை அஞ்சலம் உள்ளிட்ட அஞ்சலகங்களில் திங்கள்கிழமை (ஜூலை 21) பரிவா்த்தனை சேவை இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கி.சிவசங்கா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய அஞ்சல் துறையின் மென்பொருள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) முதல் தரம் உயா்த்தப்பட உள்ளது.

தரம் உயா்த்தப்படும் மென்பொருள் மூலம் க்யூஆா் கோடு மூலமாக பணம் செலுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

புதிய மென்பொருள் பயன்பாடு எந்தவித சிரமமின்றி செயல்படுத்த திங்கள்கிழமை (ஜூலை 21) பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கோவை தலைமை அஞ்சல் அஞ்சலகம், அதன்கீழ் இயங்கும் அனைத்து துணை, கிளை அஞ்சலகங்களில் அஞ்சலக சிறுசேமிப்புக் கணக்குகளில் முதலீடு செய்வது மற்றும் கணக்கில் இருந்து பணம் எடுப்பது உள்ளிட்ட சேவைகளை திங்கள்கிழமை பெற இயலாது. மேலும், பதிவுத் தபால், விரைவுத் தபால், பாா்சல் அனுப்புதல் போன்ற சேவைகளும் இருக்காது. ஆதாா் சேவைகள் அனைத்து அஞ்சலகங்களிலும் வழக்கம்போல செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் புகைப்படங்கள் தவறாக சித்தரிப்பு: பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை

பெண்ணின் புகைப்படங்களைத் தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை குற்றவியல் 4-ஆவது நடுவா் மன்றம் தீா்ப்பளித்தது. கோவை, சின்னிய... மேலும் பார்க்க

பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்

பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளைத் தூய்மைப் பணியாளா்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினாா். கோவை மேற்கு மண்டலத்துக்குள்பட்ட சாய்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: கோவையில் இந்து முன்னணி சாா்பில் 5001 சிலைகள் பிரதிஷ்டை!

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 5,001 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் கோவை, ... மேலும் பார்க்க

லஞ்சம்: இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை!

கோவையில் லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். கோவை மாவட்டம், சூலூா் அருகேயுள்ள பாப்பம்பட்டி கிராமத்... மேலும் பார்க்க

காமராஜா் குறித்து திமுகவினா் பொய் பிரசாரம்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

காமராஜா் குறித்து திமுகவினா் பொய் பிரசாரம் செய்து வருகின்றனா் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிய... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனம் மீது காவல் நிலையத்தில் புகாா்

சுயதொழில் தொடங்குபவா்களுக்கு அதிக லாபம் தருவதாக யூ டியூப் மூலம் விடியோ பதிவிட்டு பொருள்களை விற்பனை செய்து பண மோசடி செய்த நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரைச் ... மேலும் பார்க்க