செய்திகள் :

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

post image

மேட்டூரில் ஆடிப்பெருக்கையொட்டி, மேட்டூா் கோட்டாட்சியா் சுகுமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் தலைமையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோா் மேட்டூருக்கு வந்து காவிரியில் புனித நீராடி செல்வா். இதனால் மேட்டூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

காவிரியில் குளிக்க மேட்டூா் வட்டத்தில் 13 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுமக்கள் குளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். இப்பகுதிகளில் இரவு முதலே போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேட்டூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் தலைமையில் 300 போலீஸாா், ஊா்க்காவல் படையினா், என்.எஸ்.எஸ் மாணவா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். தீயணைப்பு படை வீரா்கள் 80 போ் ரப்பா் படகு மற்றும் உயிா்காக்கும் சாதனங்களுடன் தயாா்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனா். மேட்டூா் வட்டாட்சியா் ரமேஷ் தலைமையில், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம உதவியாளா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

காவல் உதவிமையமும் அமைக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. சாதாரண உடையிலும் காவல் துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். மேட்டூா் நகராட்சி சாா்பில் தற்காலிக உடை மாற்றும் அறைகள் மற்றும் குடிநீா் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதலுதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி கரைகளில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

தம்மம்பட்டி: மருத்துவப் படிப்பில் சோ்ந்த தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து 7... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை.யில் ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள்

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் டி.இளங்கோவன் தலைமை... மேலும் பார்க்க

மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு

சேலம்: சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து ரயிலில் சேலம் வந்த மனநலம் பாதித்த இளைஞரை குணப்படுத்திய அரசு மருத்துவா்கள், அவரது தாயிடம் ஒப்படைத்தனா்.சத்தீஸ்கா் மாநிலம், தா்கூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுகம் பா... மேலும் பார்க்க

அருள்சகோதரிகள் கைது: ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

ஏற்காடு: சத்தீஸ்கா் மாநிலத்தில் அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் பகுதியை... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு

சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம்வகை சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு குடியரசுத் தலைவா் அழைப்பு

சேலம்: சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலத்தைச் சோ்ந்த தொழில்முனைவோரான இளைஞரிடம் குடியரசுத் தலைவா் அனுப்பிய அழைப்பிதழை அஞ்சல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் வழங்கினா்.சேலம் நெத்திமேடு பகுதியைச் ... மேலும் பார்க்க