செய்திகள் :

மேட்டூரில் தங்க நகை முதலீட்டு திட்டத்தில் ஏமாந்தவா்கள் புகாா் அளிக்கலாம்

post image

மேட்டூா், அந்தியூா் பகுதிகளில் தங்க நகை முதலீட்டு திட்டத்தில் சோ்ந்து ஏமாந்தவா்கள் புகாா் அளிக்கலாம் என பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் மேட்டூரில் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தனியாா் ஜுவல்லரி நிறுவனம் சேலம் மாவட்டம், மேட்டூரிலும், ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் முறைப்படி அரசு நடைமுறை விதிகளை பின்பற்றாமலும் முறையாகப் பதிவு செய்யாமலும் தங்க நகை முதலீட்டு திட்டம், வாரச்சீட்டு, மாதச்சீட்டு, தங்க நகை சேமிப்பு திட்டங்கள், வைப்புத் தொகை சேமிப்பு திட்டத்தில் முதலீடுகளை பெற்றுள்ளது.

இந்த நிறுவனத்தின் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள், விரைவில் ஈரோடு மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

மருத்துவம் படிக்கும் 3 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இளம்பிறை, டி.அபிநயா, வி. செல்வபிரியா ஆகியோருக்கு அரசின் 7.5 ... மேலும் பார்க்க

போதை இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுப்பு: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடித்து உடைப்பு

தீவட்டிப்பட்டி அருகே போதையில் இருந்த இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுத்ததால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வீடு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ... மேலும் பார்க்க

முனியப்பன் கோயிலில் ஆடித்திருவிழா

சங்ககிரியை அடுத்த ஆவரங்கரம்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள முனியப்பன் கோயிலில் ஆடித்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், முனியப்பனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபி... மேலும் பார்க்க

சிறைக் கைதியிடம் கஞ்சா, கைப்பேசி பறிமுதல்

சேலம் மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு சென்ற சிறைக் கைதியிடம் இருந்து கஞ்சா, கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் கடந்த ... மேலும் பார்க்க

குகை மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் குண்டம் திருவிழா

சேலம் குகை மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் புதன்கிழமை குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். சேலம் மாநகரத்தில் ஆடித்திருவிழா களைகட்டிய நிலையில், குகை மாரிய... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: 7, 8, 9 தேதிகளில் 17 இடங்களில் நடைபெறுகிறது

சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் 7, 8, 9-ஆம் தேதிகளில் 17 இடங்களில் நடைபெறுகிறது என சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது: சேல... மேலும் பார்க்க