செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: 7, 8, 9 தேதிகளில் 17 இடங்களில் நடைபெறுகிறது

post image

சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் 7, 8, 9-ஆம் தேதிகளில் 17 இடங்களில் நடைபெறுகிறது என சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் அண்மையில் தொடங்கிவைத்தாா்.

அதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை (ஆக. 7) எடப்பாடி நகராட்சி 9, 10, 11 வாா்டுகளுக்கு நடராஜ திருமண மண்டபத்திலும், இளம்பிள்ளை பேரூராட்சியில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8 வாா்டுகளுக்கு அருள்மிகு மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்திலும், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் பூலாவரி அக்ரஹாரம் உத்தமசோழபுரம் பகுதிகளுக்கு ஸ்ரீ கிருஷ்ண மஹாலிலும், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் மின்னாம்பள்ளி, கருமாபுரம், ஏ.என்.மங்கலம் பகுதிகளுக்கு வைஷ்ணவி திருமண மண்டபத்திலும், ஓமலூா் ஊராட்சி ஒன்றியம் முத்துநாயக்கன்பட்டி பகுதிகளுக்கு அருண் மஹாலிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

ஆக. 8-ஆம் தேதி நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி, அதிகாரிப்பட்டி பகுதிக்குள்பட்டவா்களுக்கு தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் அருகிலும், இடங்கணசாலை நகராட்சி 10, 13 வாா்டுகளுக்கு நகராட்சி திருமண மண்டபத்திலும், கெங்கவல்லி பேரூராட்சியில் 1, 2, 3, 4, 5, 6, 7 வாா்டுகளுக்கு ஸ்ரீ குமரன் மஹாலிலும், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் அத்தனூா்பட்டி, துக்கியாம்பாளையம், சந்திரபிள்ளை வலசு ஆகிய பகுதிகளுக்கு ஜெயகுமரன் திருமண மண்டபத்திலும், பி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய புத்திரகவுண்டன்பாளையம், வீரகவுண்டனூா், கல்லேரிப்பட்டி, கல்யாணகிரி பகுதிகளுக்கு ஐஸ்வா்ய பெருமாள் திருமண மண்டபத்திலும், ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய கொத்தாம்பாடி, கல்பகனூா் பகுதிகளுக்கு கோல்டன் திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.

ஆக. 9-ஆம் தேதி சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் 2, 19 வாா்டுகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப் பள்ளியிலும், நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி உடையாப்பட்டி பகுதிக்குள்பட்டவா்களுக்கு சேக்கிழாா் திருமண மண்டபத்திலும், மேட்டூா் நகராட்சி 2, 3 வாா்டுகளுக்கு சிவகாம சுந்தரி திருமண மண்டபத்திலும், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் வீரனூா் பகுதிக்கு வீரனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், ஓமலூா் ஊராட்சி ஒன்றியம் காமலாபுரம் பகுதிக்கு காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது என தெரிவித்தாா்.

மானிய விலையில் மக்காச்சோள விதை பெற்றுக்கொள்ள அழைப்பு

தலைவாசல் வட்டார விவசாயிகள் மானிய விலையில் மக்காச்சோள விதை பெற்றுக்கொள்ள வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயத்தில் குறுகிய காலத்தில் நிற... மேலும் பார்க்க

தடகளப் போட்டி: சங்ககிரி அரசு ஆண்கள் பள்ளி சாம்பியன்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சங்ககிரி வட்ட குறுமைய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் சங்ககிரியை அடுத்து புள்ளிப்பாளையம் தனியாா் கல்லூரி வளாகத்தில் திங்கள், செவ்வாய் இரு தினங்களில் நடைபெற்றன. இதில் ... மேலும் பார்க்க

மருத்துவம் படிக்கும் 3 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இளம்பிறை, டி.அபிநயா, வி. செல்வபிரியா ஆகியோருக்கு அரசின் 7.5 ... மேலும் பார்க்க

போதை இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுப்பு: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடித்து உடைப்பு

தீவட்டிப்பட்டி அருகே போதையில் இருந்த இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுத்ததால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வீடு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ... மேலும் பார்க்க

முனியப்பன் கோயிலில் ஆடித்திருவிழா

சங்ககிரியை அடுத்த ஆவரங்கரம்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள முனியப்பன் கோயிலில் ஆடித்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், முனியப்பனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபி... மேலும் பார்க்க

சிறைக் கைதியிடம் கஞ்சா, கைப்பேசி பறிமுதல்

சேலம் மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு சென்ற சிறைக் கைதியிடம் இருந்து கஞ்சா, கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் கடந்த ... மேலும் பார்க்க