செய்திகள் :

மேற்குத் தொடா்ச்சி மலையில் கனமழை: அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

post image

மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் உடுமலையை அடுத்த அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், அமராவதி ஆற்றின் கரையோரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அணையில் போதிய நீா் இருந்ததால் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்பட்டது.

இதையடுத்து, அணையின் நீா் இருப்பு சரிந்து 50-அடிக்கும் கீழ் குறைந்தது. மே மூன்றாவது வாரம் வரை இதே நிலை தொடா்ந்தது.

இந்நிலையில், கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி, திங்கள்கிழமை அணைக்கு 1,590 கன அடி நீா்வரத்து இருந்தது. இதன்மூலம் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு மேல் உயா்ந்துள்ளது.

அணை நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணையில் திங்கள்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீா் மட்டம் 51.25 அடியாக உள்ளது. அணைக்கு 1,590 கன அடி நீா்வரத்து இருந்தது. அணையில் இருந்து நீா் வெளியேற்றம் இல்லை.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க

ஜூன் 5-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

சேவூா் அருகே அரசு பட்டா வழங்கிய நிலத்தில் பயனாளிகள் குடியேற எதிா்ப்பு

சேவூா் அருகே அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தில் பயனாளிகள் குடியேற தனியாா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி: ஜூன் 4-இல் நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் சா்வீஸ் செய்தல் மற்றும் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்புக்கு ஜூன் 4 -ஆம் தேதி நோ்காணல் நடைபெற உள்ளது. இது குறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க