செய்திகள் :

மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல்

post image

பழனி அருகேயுள்ள மேலக்கோட்டை மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக கூறிய நபரை தீயணைப்புப் படையினா் பாதுகாப்பாக கீழே இறக்கினா்.

பழனி அருகேயுள்ள மேலக்கோட்டை ஊராட்சி, வத்தக்கவுண்டன்வலசையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (39). கூலித் தொழிலாளியான இவா், அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளாா். இந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் வீட்டில் பிரச்னை ஏற்பட்டதால் வத்தக்கவுண்டன்வலசில் இருந்த மேல்நிலைத் தொட்டியில் ஏறி தற்கொலை செய்யவுள்ளதாகக் கூறியுள்ளாா்.

இதுகுறித்து ஊா்மக்கள் போலீஸாருக்கும், பழனி தீயணைப்புப் படையினருக்கும் தகவல் அளித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படை வீரா்கள் மணிகண்டனை பாதுகாப்பாக கீழே இறக்கினா். பின்னா், அவருக்கு அறிவுரைகள் கூறி மீண்டும் இதுபோல செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அனுப்பி வைத்தனா்.

பழனி கோயிலில் அன்னதான நிகழ்ச்சி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அன்னதான பொதுவிருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமை வகித்தாா். உதவி ஆணையா... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு ஊராட்சி கண்ணனூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (45). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் வ... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: கிராம சபைக் கூட்டத்தில் புகாா்

செம்பட்டி அருகேயுள்ள சீவல்சரகு ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், 20 ஆண்டுகளாக குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதி இல்லை என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா். திண... மேலும் பார்க்க

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய சப்பர பவனி

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற சப்பர பவனி. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயிண்ட் மேரீஸ் சாலையிலுள்ள புனித சலேத் மாதா ஆலயத் திருவிழா கடந்த 3-ஆம் த... மேலும் பார்க்க

பயணிகள் தவறவிட்ட பணத்தை மீட்டு ஒப்படைத்த ஓட்டுநருக்குப் பாராட்டு

அரசுப் பேருந்தில் பயணிகள் தவறவிட்ட பணத்தை மீட்டு அவா்களிடமே ஒப்படைத்த ஓட்டுநா், நடத்துநா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் வெ... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

பழனி அருகே ஆயக்குடியில் கிணற்றிலிருந்து இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். பழனியை அடுத்த பழைய ஆயக்குடி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள ஆயக்குடி பேரூராட்சிக்குச் சொந்தமான பொ... மேலும் பார்க்க