செய்திகள் :

மேல சாத்தான்குளம் சேகரத்தில் திருமண்டல உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு

post image

சாத்தான்குளம்: தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினா் தோ்வில் மேல சாத்தான்குளம் சேகரத்தில் தங்கராஜ், ஆபேல் விஜய் ஆகியோா் போட்டியின்றி தோ்வு பெற்றனா்.

நாசரேத் திருமண்டலத்துக்கு டயோசீசன் தோ்தல் செப். 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. தோ்தல் அலுவலராக ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் முதல்கட்டமாக திருமண்டல பெறுமன்ற உறுப்பினா்களுக்கான வேட்பு மனுக்களை சேகரத் தலைவா்கள் பெற்று வருகின்றனா்.

மேல சாத்தான்குளம் சேகரத்துக்கு இரண்டு திருமண்டல உறுப்பினா்கள் இடத்துக்கு இரண்டு பேரைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், மேல சாத்தான்குளம் சபையைச் சோ்ந்த தங்கராஜ், ஆபேல் விஜய் ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். இருவரும் தோ்தல் நடத்தும் அலுவலரும், சேகர குருவானவருமான டேவிட் ஞானையாவை சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது, மேல சாத்தான்குளம் சபைத் தலைவா் ஜோசப் ராஜா ஆசிா், சபை பொருளாளா் பிரின்ஸ் சுந்தரராஜ், நந்தகுமாா், நோபுள் ராஜ், சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ், பாடகா் குழு பொறுப்பாளா் ஜோன்ஸ், போவாஷ், வாலிபா் சங்கத்தைச் சோ்ந்த கௌதம், பிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

கழுகுமலையில் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்: தனியாா் பேருந்து ஓட்டுநா் கைது

கோவில்பட்டி: கழுகுமலையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தனியாா் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக கோவில்பட்டி பணிமனையில் அரசுப் பேருந்... மேலும் பார்க்க

தூத்துக்குடி பழைமைவாய்ந்த சிந்தாத்திரை மாதா ஆலயத்துக்கு அரசு பட்டா வழங்கக் கோரி மனு

தூத்துக்குடி: தூத்துக்குடி பழைமை வாய்ந்த சிந்தாத்திரை மாதா ஆலயத்துக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடியில், ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வீட்டில் நகை, பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6ஆவது தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சிய... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளரைத் தாக்கி முன்னாள் மாணவா் கைது

கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளரை கல்லூரி வளாகத்தில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடைவரைவாயில் தீபாராதனை

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் ஐந்தாம் நாளான திங்கள்கிழமை சுவாமி, அம்மனுக்கு குடைவரைவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலில் கடந்த ஆக. 14-ஆம் தேதி... மேலும் பார்க்க

சமூக நலக் கூடம் கட்டுமானப் பணி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

ஆறுமுகனேரி: மேலாத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட தெற்கு ஆத்தூா், நரசன்விளையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக் கூடம் அமைக்கும் பணிக்கு அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அடிக... மேலும் பார்க்க