செய்திகள் :

மே 16 வரை எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

post image

தமிழகத்தில் மே 16 வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,

மே 14(இன்று) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 15ல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 16ல் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 17, 18ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல்| 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை..

இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

பொறியியல் கலந்தாய்வு: 1.39 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் (2025-2026) பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான கலந்தாய்வுக்கு கடந்த 8 நாள்களில் 1.39 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறி... மேலும் பார்க்க

சூழல் சாா் சிகிச்சை வழிகாட்டுதல்களை வகுக்க முடிவு: மத்திய சுகாதார அறிவியலாளா் சன்சல் கோயல்

இந்தியாவில் சூழலுக்கேற்ப மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மத்திய சுகாதார ஆராய்ச்சித் துறை அறிவியலாளா் டாக்டா் சன்சல் கோயல் தெரிவித்தாா். போரூா்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: தமிழக பாஜக பேரணி

பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்து தமிழக பாஜக சாா்பில் புதன்கிழமை மூவா்ணக் கொடியை ஏந்தி பேரணி நடைபெற்றது. தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா்கள் தமிழிசை ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேடு வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கான திட்டத்தில் முறைகேடு நடந்ததாக சவுக்கு சங்கா் வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்களை தொழில்முனைவோராக மாற்றும் திட்டத்தை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாக யூ டியூபா் சவுக்கு சங்கா் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தர... மேலும் பார்க்க

ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கை சிபிசிஐடி பதிவு செய்தது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொ... மேலும் பார்க்க