செய்திகள் :

மோசமான வானிலை..! தரையிறங்க முடியாமல் தவித்த ஒடிசா முதல்வர் சென்ற விமானம்!

post image

மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் தவித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ சென்ற விமானம், கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ, 5 நாள் அரசு முறைப் பயணமாக, தில்லி சென்றிருந்தார். இந்நிலையில், ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் இன்று (செப்.5) காலை 9.45 மணியளவில் அவர் வந்த விமானம் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கனமழை மற்றும் மோசமான வானிலையால், அவரது விமானம் புவனேசுவரத்தில் உள்ள பிஜு பட்நாயக் பன்னாட்டு விமான நிலையத்தில், தரையிறங்க முடியாமல் அங்கேயே சுமார் 21 நிமிடங்கள் பறந்துக்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த விமானம் மேற்கு வங்கம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவுக்கு, திருப்பி விடப்பட்டு அங்கு பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஒடிசா அரசு சார்பில் நடத்தப்படும் முதல்வர் மஜ்ஹி தலைமையிலான ஆசிரியர் நாள் விழாவானது, காலை 11.30 மணியில் இருந்து மாலை 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஒரு கோடி பேரை கொல்ல 400 கிலோ ஆர்டிஎக்ஸ்! விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அச்சுறுத்தல்!

It has been reported that the plane carrying Odisha Chief Minister Mohan Charan Majhi was diverted to Kolkata after it was unable to land due to bad weather.

அனில் அம்பானி ‘கடன் மோசடியாளா்’ மேலும் ஒரு வங்கி அறிவிப்பு

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளா்’ என பாங்க் ஆஃப் பரோடா வங்கி வகைப்படுத்தியுள்ளது. முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பாங்க் ஆஃ... மேலும் பார்க்க

ஹிமாசலில் வெள்ளம்-நிலச்சரிவு: 5,200 வீடுகள் சேதம்; 1,200 சாலைகள் மூடல் - இதுவரை 355 போ் உயிரிழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 1,000 வீடுகள் முழுமையாக இடிந்துவிட்டன. 1,200-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. அதிபட்ச... மேலும் பார்க்க

சிறந்த திறன் கொண்ட ஆசிரியா்கள் மிகவும் முக்கியம்: குடியரசுத் தலைவா் முா்மு

சீா்மிகு (ஸ்மாா்ட்) வகுப்பறைகள், கரும்பலகைகள் மற்றும் பிற நவீன வசதிகளைவிட சிறந்த திறன் கொண்ட ஆசிரியா்கள் இருப்பது மிகவும் முக்கியம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா். புது தில்லி வி... மேலும் பார்க்க

மோரீஷஸ் பிரதமா் செப்.9-இல் இந்தியா வருகை

மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திரா ராம்கூலம் 8 நாள் அரசுமுறைப் பயணமாக செப்.9-ஆம் தேதி இந்தியா வருகிறாா். செப்.16 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவா் பாதுகாப்பு, வா்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்... மேலும் பார்க்க

சந்திர கிரகணம் முன்னிட்டு கோயில்களின் நடை அடைப்பு!

திருப்பதி: சந்திர கிரகணத்தையொட்டி திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில், திருப்பதி கோவிந்தராஜசுவாமி கோயில், கோதண்டராம சுவாமி கோயில், கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், ஸ்ரீனிவாசமங்காபுரம் மற்றும் அப்பளாய... மேலும் பார்க்க

தில்லியில்.. சட்டவிரோதமாக வசித்த 15 வெளிநாட்டினர் வெளியேற்றம்!

தில்லியில், சட்டவிரோதமாக குடியேறி வசித்த 15 வெளிநாட்டினர் தங்களது தாயகங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தலைநகர் தில்லியில், உரிய அனுமதி இல்லமலும், விசா காலாவதியாகியும் இந்தியாவில் வசித்து வரும் வெளிநா... மேலும் பார்க்க