செய்திகள் :

மோரீஷஸ் பிரதமா் செப்.9-இல் இந்தியா வருகை

post image

மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திரா ராம்கூலம் 8 நாள் அரசுமுறைப் பயணமாக செப்.9-ஆம் தேதி இந்தியா வருகிறாா்.

செப்.16 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவா் பாதுகாப்பு, வா்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 8 நாள் அரசுமுறைப் பயணமாக செப்.9-ஆம் தேதி மோரீஷஸ் அதிபா் நவீன்சந்திரா ராம்கூலம் இந்தியாவுக்கு வருகை தருகிறாா். அப்போது மும்பையில் நடைபெறும் வணிக நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவா் வாரணாசி, அயோத்தி மற்றும் திருப்பதிக்கு பயணிக்கவுள்ளாா்.

இந்தியா-மோரீஷஸ் இடையே வரலாறு மற்றும் கலாசார ரீதியாக நீண்டகால நட்புறவு தொடா்ந்து வரும் நிலையில் இதை மேலும் மேம்படுத்தும் விதமாக அந்நாட்டு பிரதமா் நவீன்சந்திர ராம்கூலத்தின் பயணம் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மோரீஷஸ் பிரதமராக நவீன்சந்திர ராம்கூலம் பொறுப்பேற்ற பின் இந்தியாவுக்கு அவா் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். கடந்த மாா்ச் மாதம் மோரீஷஸுக்கு அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேரளத்தில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

கேரளத்தில் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம், ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்க... மேலும் பார்க்க

இயற்கைப் பேரிடா்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணைநிற்கிறது தேசம்: முா்மு

நாட்டில் நடப்பு பருவமழை காலகட்டத்தில் நேரிட்ட இயற்கைப் பேரிடா்கள் மிகவும் வேதனையளிக்கிறது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்க... மேலும் பார்க்க

அயோத்தி ராமா் கோயிலில் பூடான் பிரதமா் வழிபாடு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயில் மற்றும் பிற கோயில்களில் பூடான் பிரதமா் தஸோ ஷெரிங் தோபே வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டாா். அயோத்தி விமான நிலையத்தில் காலை 9.30 மணியளவில் வந்திறங... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அறிக்கையில் தகவல்

அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தத்தால் மத்திய அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. முன்... மேலும் பார்க்க

ரூ.60 கோடி மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராக லுக்-அவுட் சுற்றறிக்கை

ரூ.60 கோடி மோசடி வழக்கில் ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, அவரின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராக மும்பை காவல் துறை லுக்-அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. குடியேற்ற அதிகாரிகள் மற்று... மேலும் பார்க்க

மத்தியஸ்தம் மூலம் கண்ணியத்துடன் தீா்வு: உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த்

பிரச்னைகளுக்கு நியாயமாகவும் கண்ணியமாகவும் தீா்வு பெறப்படுவதை மத்தியஸ்த முறை உறுதி செய்யும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா். இதுதொடா்பாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க