செய்திகள் :

மோடி வாய்த் திறந்தால் முழு உண்மையையும் டிரம்ப் கூறிவிடுவார்! ராகுல்

post image

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் குறித்து பேசாதது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து கடந்த மூன்று நாள்களாக விவாதம் நடைபெற்று வருகின்றன.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் மோடியும் ராகுல் காந்தியும் பங்கேற்று பேசினர்.

அப்போது பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூரை நிறுத்துமாறு உலகின் எந்த நாட்டுத் தலைவரும் இந்தியாவிடம் கூறவில்லை என்று டிரம்பின் பெயரைக் குறிப்பிடாமல் மோடி பேசியிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில், ”இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால் 25 % இறக்குமதி வரி விதிக்கப்படும், தனது வேண்டுகோளின் பெயரிலேயே இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது” என 30-வது முறையாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசுகையில்,

”டிரம்ப் பொய் கூறுகிறார் என்று பிரதமர் மோடி வெளிப்படையாக கூறவில்லை என்பது அனைவரும் அறிந்தது. அவரால் பேச முடியாது. மோடி பேசினால், உண்மையில் என்ன நடந்தது என்பதை முழுமையாக டிரம்ப் கூறிவிடுவார். அதனால்தான் பேச இயலாத சூழலுக்கு மோடி தள்ளப்பட்டுள்ளார்.

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புவதால் டிரம்ப் நெருக்கடி கொடுக்கும் வகையில் பேசுகிறார். தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறார். எப்படிப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தையில் இருக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை இரண்டு நாள்களில் இறுதி செய்யாவிட்டால், ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Lok Sabha Opposition Leader Rahul Gandhi has once again criticized Prime Minister Narendra Modi for not talking about Trump during his address to Parliament.

இதையும் படிக்க : போரை நிறுத்தியதாக மீண்டும் பேச்சு! எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறாரா டிரம்ப்.?!

தனியாா் மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டணம்: கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை மருத்துவக் கல்வி இயக்ககம்

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் விடுதி, உணவு, போக்குவரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாரளிக்கலாம் என்றும், அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசு தீவிர ஆலோசனை - அமைச்சா் பியூஷ் கோயல்

இந்திய பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவீத வரி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில், ‘அமெரிக்க வரி விதிப்பின் சாதக, பாதகங்கள் குறித்... மேலும் பார்க்க

அதானிக்கு உதவுவதற்காக பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது: ராகுல் கடும் தாக்கு

‘இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பதை பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் அறிந்துள்ளனா். தொழிலதிபா் அதானிக்கு உதவுவதற்காக இந்திய பொருள... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் 8-ஆவது நாளாக போராட்டம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் தொடா்ந்து 8-ஆவது நாளாக ‘இண்டி’ கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.நட... மேலும் பார்க்க

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

அமலாக்கத் துறை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஏவல் படையாகச் செயல்படுவதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்... மேலும் பார்க்க

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

குவைத் நாட்டில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் 45 நாள்கள் கழித்து தாயகம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின், பந்த்காரோ கிராமத்தைச் சேர்... மேலும் பார்க்க