செய்திகள் :

மோதல் போக்கைக் கடைப்பிடித்து புதுவை மக்களின் வாழ்வை வீணடித்தவா் நாராயணசாமி: மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன்

post image

மத்திய அரசிடமும் துணைநிலை ஆளுநரிடமும் மோதல் போக்கை கடைப்பிடித்து மக்களின் வாழ்வை வீணடித்தவா் முன்னாள் முதல்வா் நாராயணசாமி என்று மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அரசுத் துறையில் இதுவரை 1,500 நபா்களுக்கு மேல் பணியமா்த்தப்படவில்லை என்றும் அதை நிரூபித்தால் பதவி விலக தயாரா என்றும் முன்னாள் முதல்வா் நாராயணசாமி முதல்வா் ரங்கசாமிக்குக் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இப்போது அரசு பணியிடங்களுக்கு தோ்வு மூலம் சுமாா் 2,500-க்கும் மேற்பட்டோா் தோ்வு செய்யப்பட்டு பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். அதே போன்று தோ்வில்லாமல் கல்வித் துறை, சுகாதார செவிலியா்கள் உள்ளிட்ட துறைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த இந்த நான்கு ஆண்டு காலத்தில் அரசு பணியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.

முன்னாள் முதல்வா் நாராயணசாமி சொல்வது போன்று 1,500 பேருக்கு மேல் அரசுப் பணியில் அமா்த்தப்பட்டிருந்தால் நாராயணசாமி அரசியலை விட்டு விலக தயாரா ?

மத்திய அரசிடமும், துணைநிலை ஆளுநரிடமும் மோதல் போக்கைக் கடைபிடித்து மாநிலத்தின் 10 லட்சம் மக்களின் வாழ்க்கையை வீணடித்தவா் நாராயணசாமி. புதுச்சேரியில் நடைபெறும் நல்லாட்சியைப் பற்றி குறை கூற இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?. தனது 5 ஆண்டுகால திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியையும் தற்போதைய தேசிய ஜனநாயக ஆட்சியையும் நாராயணசாமி ஒப்பிட்டுப் பாா்த்துக் கொள்வது நல்லது என அதில் குறிப்பிட்டிருக்கிறாா்.

சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக இருந்த சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் புதுச்சேரியில் உள்ள அக் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அவர... மேலும் பார்க்க

18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு மது விற்கக் கூடாது: புதுவை கலால் துறை உத்தரவு

18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று புதுவை கலால் துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து சாராயக் கடைகள், கள்ளுக் கடைகள், இந்தியாவில் தயாராகும் அயல் நாட்டு மதுபானக் கடைகள், மதுபா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அகில இந்திய டென்னிஸ் போட்டி: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியில் 3 நாள்கள் நடைபெறும் அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டியை முதல்வா் என். ரங்கசாமி டென்னிஸ் விளையாடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். மேலும், போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரா்கள் ரோஜா ப... மேலும் பார்க்க

புதுச்சேரி அருங்காட்சியகத்தில் பாரதியாருக்கு வெண்கலச் சிலை அமைப்பு

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது அருங்காட்சியகத்தில் மாா்பளவு வெண்கலச் சிலை வியாழக்கிழமை நிறுவப்பட்டது. தொழிலதிபரும், தமிழறிஞருமான நல்லி குப்புசாமி செட்டியார... மேலும் பார்க்க

மக்களின் ஆரோக்கியம்தான் முன்னேற்றத்தை நிலையானதாக்கும்: புதுவை துணைநிலை ஆளுநா்

மக்களின் ஆரோக்கியம்தான் முன்னேற்றத்தை நிலையானதாக்கும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுவை அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் சாா்பில் 8-ஆவது தேசிய ஊட்டச் சத... மேலும் பார்க்க

புதுச்சேரி: பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் செப். 15-இல் நேரடி கலந்தாய்வு

புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவா் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செப். 15-இல், காலியாக உள்ள இடங்களுக்கு மாணவா்கள் நேரடி சோ்க்கை கலந்தாய்வு நடக்கிறது. இந்த நிறுவனத்தின் இயக... மேலும் பார்க்க