செய்திகள் :

மோதிக்கொண்ட அபிஷேக் சர்மா - திக்வேஷ் ரதி! அபராதத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடை!

post image

ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா மற்றும் லக்னௌ வீரர் திக்வேஷ் ரதி இருவரும் மைதானத்தில் மோதிக் கொண்ட நிலையில், இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 61-வது போட்டி லக்னௌவின் எக்கானா மைதானத்தில் நேற்றிரவு(மே 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்ற நிலையில், தோல்வியடைந்த லக்னௌ அணி ஃபிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரிலிருந்து வெளியேறியது.

இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த நிலையில், லக்னௌ வீரர் திக்வேஷிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அபிஷேக் வெளியேறும் போது தனது வழக்கமான பாணியில் திக்வேஷ் கையெழுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது.

கள நடுவர்கள் மற்றும் அணி வீரர்கள் சேர்ந்து இருவரையும் விலக்கிவிட்டனர். மேலும், அபிஷேக் சர்மா, திக்வேஷ் ரதியின் முடியைப் பிடிப்பது போலவும் சைகை காட்டினார். போட்டி முடிந்ததும் இருவரும் சமாதனமாக மாறி, கை கொடுத்துக் கொண்டனர். பிசிசிஐ துணைப் பொதுச் செயலரும், காங்கிரஸ் எம்பியுமான ராஜீவ் சுக்லாவும் இருவரிடமும் சிறிது நேரம் இதுபற்றி பேசி சமாதானப் படுத்திக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், கிரிக்கெட் திடலில் மோதிக் கொண்ட லக்னௌ வீரர் திக்வேஷ் ரதிக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகித அபராதமும், ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் அடுத்து நடைபெறும் குஜராத்துக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார். அது மட்டுமின்றி 5 தகுதியிழப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டிருக்கிறது. ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவுக்கு 25 சதவிகிதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று அபராதம் பெறுவதோ அல்லது சர்ச்சைகளில் சிக்குவது திக்வேஷூக்கு புதிதொன்றும் கிடையாது. இதற்கு முன்னதாக, பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியிலும் இதுபோன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் முறையே 25 மற்றும் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்க: டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

ஆயுஷ், ப்ரீவிஸ் அதிரடி: ராஜஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்களை எடுத்துள்ளது. ஐபிஎல் 62-ஆவது போட்டியில் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தில்லியில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற... மேலும் பார்க்க

நான் எப்போது அழுதேன்? 14 வயது வீரர் சூர்யவன்ஷி விளக்கம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி முதல் போட்டியில் அழுதது குறித்து பேசியுள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணி மோசமாக விளையாடினாலும் அந்த அணியின் இளம் வீரர் 14 வயதில் பேட்டிங் செய்து உல... மேலும் பார்க்க

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ... மேலும் பார்க்க

ஒவ்வொருவரும் கே.எல்.ராகுல் மாதிரி விளையாட வேண்டும்: ஹேமங் பதானி

தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி கே.எல்.ராகுலைப் பாராட்டி பேசியுள்ளார். ஐபிஎல் 60-ஆவது போட்டியில் தில்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தில்லி 20... மேலும் பார்க்க

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு; இறுதிப்போட்டி எங்கே?

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடத்தப்படும் இடங்களை ஐபிஎல் நிர்வாகம் இன்று (மே 20) அறிவித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்... மேலும் பார்க்க

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாத ரிஷப் பந்த்; மிட்செல் மார்ஷ் கூறியதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் சரியாக விளையாடாதது குறித்து மிட்செல் மார்ஷ் பேசியுள்ளார்.லக்னௌ அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பந்த்துக்கு நடப்பு ஐபிஎல் சீசன் சரியாக அமையவில்லை. மெகா ஏலத்தில... மேலும் பார்க்க