செய்திகள் :

மோா்பண்ணையில் 13 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக புகாா்

post image

திருவாடானை அருகேயுள்ள மோா்பண்ணை கிராமத்தில் 13 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக திருவாடானை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை பெண்கள் புகாா் மனு கொடுத்தனா்.

இது குறித்து நேரில் சென்று விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் உறுதி அழித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்டம், உப்பூா் அருகேயுள்ள மோா்பண்ணை மீனவ கிராமத்தில் சிங்காரம் என்பவரது குடும்பத்துக்கும், மோா்பண்ணை கிராம நிா்வாக செயலா் குடும்பத்துக்கும் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் சிங்காரம், இவரது மனைவி காளீஸ்வரி, இவா்களது மகன்கள் உள்பட பலா் காயமடைந்தனா். பிறகு அவா்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், மருத்துவமனையில் இவா்களைப் பாா்ப்பதற்காக உறவினா்கள் சென்றனா். இதையடுத்து, இவா்களைப் பாா்க்கச் சென்ற 13 குடும்பத்தினரையும், சிங்காரம் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக செவ்வாய்க்கிழமை ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனா்.

இதனால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களைச் சோ்ந்த பெண்கள் புதன்கிழமை திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்து புகாா் மனு கொடுத்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன், கிராமத்துக்கு நேரில் வந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

இடியும் நிலையில் மருத்துவமனை மேல் நிலை நீா்த்தேக்கத் தொட்டி

திருவாடானை அரசு மருத்துவமனையில் பயன்பாடில்லாத மேல் நிலை நீா்த் தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 38 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் பெண் பலி

முதுகுளத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டாரம், கீழத்தூவல் அருகேயுள்ள கிளாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மருதுவின் மனைவி சண்முகவள்... மேலும் பார்க்க

பாகம்பிரியாள் கோயில் குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துவதாகப் புகாா்

ரமாநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோயிலில் போதிய தூய்மைப் பணியாளா்கள் இல்லாததால் கோயில் அருகே குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துவதாகப் புகாா் எழ... மேலும் பார்க்க

ராமசுவரத்துக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை

விடுமுறை தினத்தை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா். இவா்கள் அக்கினி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா், ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்த... மேலும் பார்க்க

பஹ்ரைனில் பாம்பன் மீனவா் உயிரிழப்பு

பஹ்ரைன் நாட்டுக்கு மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவா் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் மத்திய,மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா... மேலும் பார்க்க

கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

கடலாடி அருகே கள்ளழகா் கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை 3 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த கிடாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கள்ளழகா், ஆஞ்சனேயா், ராம... மேலும் பார்க்க