செய்திகள் :

ம.பி.யில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100 வீடுகள் இடிப்பு!

post image

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் உள்ள ஷக்கர் குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையின் அடிப்படையில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 100 வீடுகள் இடிக்கப்பட்டன.

காண்ட்வா பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாக நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், இருப்பினும் குடியிருப்பாளர்கள் காலி செய்யாத நிலையில் நகராட்சி ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக காண்ட்வா நகராட்சி ஆணையர் பிரியங்கா ரஜாவத் கூறுகையில்,

ஷக்கர் குளம் பகுதி அருகே ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையை நடத்தி வருகிறோம். கடந்த 4 மாதங்களாக அந்த இடத்தைக் காலி செய்யுமாறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம். சுமார் 100 சட்டவிரோத வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. 25 வீட்டு உரிமையாளர்கள் நீதிமன்ற தடை உத்தரவு வாங்கியுள்ள நிலையில், அவைகள் இடிக்கப்படவில்லை.

முன்னதாக, மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை நகரின் பேகம் பாக் பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டமைப்புகளை அகற்ற இடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. மகாகாலேஷ்வர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த இடம், மொத்தம் ஏழு கட்டமைப்புகள் அகற்றப்பட்டன.

உஜ்ஜைன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் சோனி கூறுகையில், சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு, குத்தகை விதிமுறைகளை மீறியதற்காக சாலைகளின் இருபுறமும் கட்டப்பட்ட கட்டமைப்புகளின் குத்தகையை யுடிஏ ரத்து செய்தது. அதன்பிறகு இங்கு ஏழு கட்டமைப்புகள் கட்டப்பட்ட நான்கு வீடுகள், இன்னும் சில வணிக நடவடிக்கைகள் நடந்து வருகின்றன, அவற்றுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. குத்தகை ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்த கட்டமைப்புகள் அனைத்தும் அரசு சொத்தாக மாறியுள்ளது என்று அவர் கூறினார்.

உஜ்ஜைன் மேம்பாட்டு ஆணையத்தின் நடவடிக்கையின் கீழ், பெகு பாக் பகுதியில் நான்கு இடங்களில் உள்ள ஏழு கட்டமைப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன, மேலும் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கவனிக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 150 போலீஸார் சம்பவ இடத்தில் உள்ளனர். அனைத்து நடவடிக்கைகளும் அமைதியாக நடைபெற்று வருவதாக ஏஎஸ்பி பார்கவா தெரிவித்தார்.

உயிரிழந்த 2 விமானிகள், 7 ஊழியா்கள் மகாராஷ்டிர மாநிலத்தவா்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களில், 2 விமானிகள் மற்றும் 7 ஊழியா்கள் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்களாவா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமான... மேலும் பார்க்க

கன்னடம் குறித்து கமல்ஹாசன் கருத்து: வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 20-க்கு ஒத்திவைப்பு

கன்னடம் பற்றிய நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கை விசாரித்துவரும் கர்நாடக உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.சென்னையில் நடைபெற்ற 'தக் லைஃப்'... மேலும் பார்க்க

விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரா்: தாமதம் குறித்து இஸ்ரோ தகவல்

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ஏவுகலனில் திரவ ஆக்ஸிஜன் கசிவை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசா மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், ‘வீரா்களின் பாதுகாப்பு, விண்வெ... மேலும் பார்க்க

ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனுக்கான மையம்: ஜெ.பி.நட்டா

‘ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.... மேலும் பார்க்க

சரக்கு ரயில்களைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ ரயில்வே முடிவு

சரக்கு ரயில்களில் பொருள்கள் முறையாக ஏற்றப்படுகிறதா? என்பதை ட்ரோன்கள் (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) மூலம் கண்காணிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 3 ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் இ... மேலும் பார்க்க

தொழிலதிபா் அம்பானிக்கு ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை எதிா்த்து மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தொழிலதிபா் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க