செய்திகள் :

யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் வெற்றி: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

post image

நான் முதல்வர் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்தவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதற்கு முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று(ஏப். 22) வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநிலத்தில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். அதேபோல மோனிகா என்ற மாணவி இந்திய அளவில் 39 ஆம் இடம் பெற்றுள்ளார். இருவரும் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்த 134 பேர் நேர்முகத் தேர்வுக்குச் சென்ற நிலையில், 50 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் முதன்மைத் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர பாண்டியன் என்ற தேர்வர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதையும் படிக்க | யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானது!

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த நான் முதல்வர் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | யுபிஎஸ்சி: தமிழகத்தில் முதலிடம் பெற்ற சிவச்சந்திரன்!

இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டட உரிம த... மேலும் பார்க்க

குரூப் 1 தேர்வு: இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியானது!

குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பணியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. அந்த வகையில்,... மேலும் பார்க்க

போப் இறுதிச் சடங்கு: அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பங்கேற்பு!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில்!

கோடை விடுமுறையையொட்டி தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.வருகின்ற ஏப்ரல் 29 முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்ப... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 70% மின் கட்டணம் உயர்வு: இபிஎஸ்

கடந்த 4 ஆண்டுகளில் 70 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை மானிய கோரிக்கை ... மேலும் பார்க்க

மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு மணிமண்டபம்: பத்திரப் பதிவு செய்த சீமான்!

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தியாகி மாணவர் ராஜேந்திரனுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக நிலம் வாங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திங்கள்கிழமை பத்திரப் பதிவு செய்தா... மேலும் பார்க்க